திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இல்லை - தலைவர்கள் உறுதி !

0
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக கடந்த சில நாள்களாக எழுந்த விவாதங்கள், சர்ச்சைகள் இரு தரப்பு தலைவர்களின் பேட்டி, அறிக்கை மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
கூட்டணியில் குழப்பம் இல்லை


உள்ளாட்சித் தேர்தலின் போது சில இடங்களில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே முரண் பாடான கருத்துகள் எழுந்தன. 

இதன் தொடர்ச்சி யாக திமுகவை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையைத் தொடர்ந்து இரு தரப்பும் பரஸ்பரம் கருத்து மோதலில் ஈடுபட்டனர். 

திமுக சார்பில் டி.ஆர்.பாலு, துரை முருகன் ஆகியோர் பேச, காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் திமுகவை விமர்சித்தனர். 
இந்நிலையில் காங்கிரஸ் ஒருங்கிணைத்த சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தை திமுக புறக்கணித்தது.

இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்த அவர் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை, சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு உள்ளிட்டோர் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்தனர். 

அதன்பின் செய்தியாளர் களைச் சந்தித்த அழகிரி, “கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு தோன்றிய ஒரு கருத்தைச் சொன்னோம். 


ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலை உள்ளது. எங்களுடைய நிலையை நாங்கள் கூறியதால் அது கூட்டணியை பாதிப்பதாக அர்த்த மில்லை.

ஒரு குடும்பத்தில் ஊடலும் கூடலும் இருக்கத் தான் செய்யும். 

ஆனால், கோபமும் தாபமும் இல்லை. நாங்கள் ஒற்றுமை யாகவே உள்ளோம்” என்று தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடருமா என்று கேட்கபட்ட கேள்விக்கு அதற்குப் பிறகும் தொடரும் என்று பதிலளித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். 

அதில், “மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப் பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘வெளிப்படையாக’ ஒரு அறிக்கையை வெளியிட்டார். 
சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது, கடந்த சில நாட்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மனப்பாங்கினை உணர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தி.மு.க - காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது என்றும், 

மதவாத, பாசிச சக்திகளையும் அவர்களை ஆதரித்து கைப்பாவை களாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து தி.மு.கழகம் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப் பாட்டுக்கு 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும் என்றும் அறிக்கை வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் ஆக்க பூர்வமாகத் தெரிவித்துள்ளார். 
தலைவர்கள் உறுதி


இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசியும் உள்ளார்.

ஆகவே கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து, இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொது வெளியில் நடத்திக் கொண்டிருப்பது, 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை யிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் குள்ள நரி சக்திகளுக்கும், சில ஊடகங் களுக்கும் மேலும் அசை போடுவதற்கான செயலாக அமைவதை நான் சிறிதும் விரும்பவில்லை. 
ஆகவே விரும்பத்தகாத இத்தகைய விவாதங் களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், 

கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)