சன் டிவியின் சமூக சேவை - சன்குழுமம் !

0
பெரியார், அண்ணா கொள்கை வழி வந்த குடும்பத்தின் வாரிசு களல்லவா...


பகுத்தறிவு கருத்துகளை பரப்ப வேண்டாமா? அன்று அண்ணா வின் வேலைக்காரி, ரங்கோன்ராதா,

கருணாநிதி யின் பராசக்தி, மனோகரா, கலைவாணரின் கருத்தான நகைச் சுவைகள் போன்றவை

சமூகத்தில் ஏற்படுத்திய விழிப் புணர்ச்சியை சவக்குழிக்குள் தள்ளுவதற் காகவே

அவதார மெடுத்து 'சன் தொலைகாட்சி ' வேப்பிலைக் காரி, கோட்டை  மாரியம்மன், விக்கிர மாதித்தன், சொர்க்கம்......
வாரிசு போட்டி வந்தது எதனால்? - சன்குழுமம் !
போன்ற தொடர்கள் மூலமாக 'சன்' சமூகத்திற்குத் தந்த விழிப்புணர்ச்சி கொஞ்சமா,நஞ்சமா?

ஜோசியதை மதிக்காதவங்க நாசாமப் போயிடுவாங்க...

சூனிய  வாதிங்க, மந்திரவாதிங்க கோபத்துக்கு ஆளானால் அதோகதிதான்!

சாமியார்கள் நினைத்தால் எந்த அதிசய த்தையும் சாத்தியப் படுத்தலாம்...

அடடா, எவ்வளவு மகத்தான கருத்துகள்.........

இவை யெல்லாம் விஷத்தையே வெட்கப்பட வைக்கும் வீரிய நச்சல்லவோ!


தமிழ் தெரியா தவர்கள் தான் நிகழ்ச்சி அறிவிப்பாள ர்களாக இருக்க முடியும் என்ற போக்குகள்.

இவை மட்டுமின்றி குடும்பங் களின் அமைதியைக் குலைக்கும் குரோதச் சிந்தனைகளின் குவியல் களாக எண்ணற்ற தொடர்கள்,
அவற்றில் விதவிதமாக வெளிப்படும் பாலியல் பிறழ்வுகள், பழி வாங்கும் போக்குகள், கொலை, கற்பழிப்பு, வன்முறை....

என்ன பாவம் செய்தார்களோ.... தமிழக மக்கள்!

சன் தொலைக் காட்சியோடு நிற்க வில்லை இவர்களின் சமூக சேவை.

"எந்நேரமும் மக்கள் சினிமா பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்,
அவர்களின் சிந்தனை மழுங்க வேண்டும்" என்ற கருணை உணர்வில் 'கே' சேனல்,

'நாட்டின் வளர்ச்சிக்கு அடிபடையாக உள்ள இளம் தலை முறையினர்

எப்போதும் இன்பம் எனும் சினிமா இசை வெள்ளத்தில் மூழ்கிச் சீரழிய வேண்டும்' என்ற


சீரிய முயற்சியில் 'சன் மியூசிக் சேனல்' , 'தங்கள் அரசியலுக்கு உகந்த செய்தியை மட்டுமே

மக்கள் எப்போதும் அறிந்து கொள்ள வேண்டும்' என்ற பெருந்த ன்மையோடு 'சன் நியூஸ் சேனல்',
இப்போது குழந்தை களையும் குட்டிச் சுவராக்கி விட 'சுட்டி சேனல்' இவற்றை பார்க்கா விட்டால்

மக்களின் பகுத்தறிவு மங்கி விடும்' என்று தான் இலவச தொலைக் காட்சியை அறிவித்தாரோ..... என்னவோ கருணாநிதி.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)