வாரிசு போட்டி வந்தது எதனால்? - சன்குழுமம் !

0
அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு ஜனநாயக இயக்கமாக தொடங்கி நடத்தினார்.

அவர் தனிப்பெரும் தலைவராக அறியபட்ட நிலையிலும் என்.வி. நடராஜன், இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன்

போன்றவற்கு சம மதிப்பளித்து அவர்களை அடுத்து தலைதாங்க தக்க வருகளாக ஆயத்தப் படுத்தினார்.

கருணாநிதி யின் திறமை களையும், ஆற்றல் களையும் அறிந்த அண்ணா அவர் உட்பட எவரையுமே தன தலைமைக்கு ஆபத்தான தம்பியாக கருத வில்லை.

எம்.ஜி.ஆரின் செல்வாக்கு தனக்கு ஆபத்தாகி விடுமோ என அவரை புறக்கணித்தார் கருணாநிதி. கட்சி இரண்டானது.
சன் தொலைக் காட்சியின் தொடக்கம் - சன்குழுமம் !
கருணாநிதி யின் தலைமையை ஏற்றுக் கொண்ட பிறகும் நாவலர் நெடுஞ் செழியனை

நல்ல முறையில் நடத்த வில்லை அதனால் அவரும் 1977 ல் வெளியேறினார்.

வைகோவின் வளர்ச்சி தன் வாரிசு களுக்கு ஆபத்து என்று அவரையும் அகற்றினார்.

இப்படி கருணாநியின் குடும்ப உறவுகள் கட்சியில் கோலோச்ச முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் தான்

தயாநிதி மாறன் போன்றவர்கள் தான் தோன்றிதன மாக உயர் நிலைக்கு வர முடிந்தது.

கொள்கை அடிப்படை யில் ஒரு இயக்கம் செயல் பட்டால் அங்கே குடும்ப ஆதிக்கம் வராது.

அதுவே கொள்ளை அடிப்படை யில் செயல் பட்டால் உடைமை உணர்வும், உறவுமனப் போக்கும் மேலோங்கி விடுகின்றது.

இப்போது கலைஞர் தொலைக் காட்சி ஆகஸட் 15லிருந்து ஒளிப்பரப் பாகும் என கருணாநிதி அறிவித் துள்ளார்.

சுமார் 60சேனல்கள் மூன்றாண்டு களாக அனுமதி மறுக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நிலையில்,

கருணாநிதி நினைத்த வுடன் ஒரு தொலைக் காட்சியை தொடங்க முடிகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் கேபிள் டி.வி.நெட்வொர்க்கை தமிழக ஆரசு பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் என்று


அவசரச் சட்டம் கொண்டு வந்த போது அதை அடுத்த நாளே கவர்னரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கேட்டவர் கருணாநிதி.

அது எவ்வளவு பெரிய தவறு என இன்று அவர் உணர்ந்திருக்க கூடும்.

ஒரு வேளை அதே சட்டத்தை கருணாநிதியே இப்போது அமல் படுத்த முனைந்தாலும் ஆச்சிரியப் படுவதற் கில்லை.

மேலை நாடுகளில், அமெரிக்கா, ஐரோப்பா வில், ஒரே குடும்பத்தி லுள்ளவர்கள் அரசியல்,

ஊடகம் இரண்டிலும் மேலாதிக்கம் செய்வதை தடுக்கும் சட்டம் ஒன்று உள்ளது. 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் ஊடகத் துறையில்
தயாநிதிக்கு தரப்பட்ட முக்கியத்துவங்கள் - சன்குழுமம் !
தனியொரு நிறுவனமே ஒட்டு மொத்த பார்வை யாளர்களை யும் கபளிகரம்

செய்வது மாதிரியான போக்கு களுக்கு தடை ஏற்படுத்தும் சட்டங்கள் உள்ளன.

குறிப்பாக ஒரே நிறுவனம், ஒரே பிரதேசத்தில் பல சேனல் களை ஆரம்பிப்பது, காட்சி ஊடகம், அச்சு ஊடகம்,

வானொலி போன்ற அனைத்திலுமே ஒரே குடும்ப நிறுவனம் தனி மேலாதிக்கம் (Monopoliy) 

செய்வதை தடுப்பது மாதிரியான சட்டங்கள் 1980,1990 களிலிருந்து அமலில் உள்ளது.


இது போன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டி சில ஆண்டுக ளாக

பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கு எல்லா தரப்பிலும் வலுவான ஆதரவு வெளிப்பட வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)