ரயில்வே தண்டவாளத்தில் காதல் ஜோடி உடல்கள் கண்டெடுப்பு !

0
ஆந்திர ரயில்வே தண்டவாளத்தின் அருகே தமிழகத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடிகளின் உடல்களை போலீசார் கண்டறி துள்ளனர். 


அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்க லாம் என போலீசார் சந்தேகிக் கின்றனர்.

ஆந்திர மாநிலம் குப்பம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே அடையாளம் தெரியாத இருவரின் உடல்கள் 

ரயிலில் அடிப்பட்டு கிடப்பதாக போலீசாரு க்கு தகவல் கிடைத்தது. 

தகவலறிந்து சென்ற ரயில்வே போலீசார், இறந்தவர் களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது: 

“திருவள்ளூர் மாவட்டம் எட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த மோனிஷா வும், ஹேமா நாத்தும் காதலித்து வந்ததாக தெரிகிறது. 

மோனிஷா வேலூரில் இளங்கலை பட்டம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். 

நேற்று மதியம் கல்லூரியை விட்டு வெளியேறிய அவர், அதன் பின்னர் ஹேமாநாத்தை சந்தித்துள்ளார். 

இதை யடுத்து இன்று அதிகாலை 2 மணி அளவில் அவர்களின் உடல்கள் குப்பம் ரயில்வே தண்ட வாளத்தின் அருகே கண்டெடுக்கப் பட்டுள்ளது. 


அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் இன்னும் வரவில்லை. 

வேறு எந்த தகவலும் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று கொண்டு வருகிறது. 

காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டிருக் கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.” இவ்வாறு தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)