பெற்றோரின் ஆபாச படத்தை வலைதளத்தில் அனுப்பிய சிறுவன் !

பெற்றோரின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் 13 வயது மகனுக்கு விலை உயர்ந்த மொபைல் ஒன்றை வாங்கி கொடுத் துள்ளனர்.
பெற்றோரின் ஆபாச படத்தை வலைதளத்தில் அனுப்பிய சிறுவன் !
மொபைல் பயன் படுத்துவதில் அடிமை யான அச்சிறுவன், முகநூல் கணக்கு ஒன்றினை துவங்கி, அதன் மூலம் தேஜல் படேல் என்பவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளான்.

இதன் போது, தேஜல் படேல் அச்சிறுவனுக்கு ஆபாச படங்களை அனுப்பி யுள்ளார், மேலும் நான் அனுப்பியது போன்று நீயும் ஆபாச படங்களை அனுப்பு எனக் கூறியுள்ளார்.

பதிலுக்கு அச்சிறுவன், தனது பெற்றோர் நெருக்கமாக இருக்கும் காட்சியை ரகசியமாக புகைப்படம் எடுத்து அதனை அனுப்பி யுள்ளான். மேலும் அது எனது பெற்றோர் தான் எனவும் தேஜலிடம் கூறியுள்ளான்.

இதனை அறிந்த தேஜல், அச்சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களின் ஆபாச படம் என்னிடம் உள்ளது, ரூ. 1 கோடி கொடுக்க வேண்டும்.

இல்லை யெனில் சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி யுள்ளான். அதே நேரத்தில் அந்த படத்தை உங்களது மகன் தான் முகநூலில் தனக்கு அனுப்பியதாக அவர் சிறுவனின் பெற்றோரிடம் கூறி யுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி, உடனே தங்களது மகன் வைத்திருந்த மொபைலை வாங்கி பார்த்தனர். 

அப்போது தான், தாங்கள் நெருக்கமாக இருக்கும் ஆபாச படத்தை தேஜல் படேல் என்பவருக்கு சிறுவன் அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
பின்னர் நடந்த சம்பவங்களை கூறி பெங்களூரு காவல் நிலையத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவு பொலிசில் அந்த தம்பதியினர் புகார் கொடுத்தனர். 

சிறுவனுடன் முகநூலில் பழக்கமான தேஜல் படேல் யார்? என்பது தெரிய வில்லை.

அவர் போலியான தகவல்களை கொடுத்து பேஸ்புக்கில் கணக்கு வைத்திரு க்கலாம் என்று பொலிசார் சந்தேகிக் கின்றனர். அந்த மர்ம நபரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags: