காற்றை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?

கேள்வி: காற்றை செயற்கை யாக உருவாக்க முடியுமா ?
காற்றை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
பதில்: முடியாது... அனைத்து வாயுக் களும் சேர்ந்தது தான் காற்று என்பது அறிவீர்கள்.

சரி, இரண்டு ஹைட்ரஜனும் ஒரு ஆக்ஸிஜனும் சேர்ந்தது தான் தண்ணீர் என்று தெரியும்... 
காற்றில் இரண்டு வாயுக் களுமே இருக்கி ன்றது... ஆனால் அவற்றைக் கொண்டு நம்மால் தண்ணீர் உருவாக்க முடியுமா...?

இதற்குப் பதில் தேடினால்.... இயற்கை நமக்கு எத்தனை விதத்தில் உதவி செய் துள்ளது...

ஆனால் அதனை நாம் கெடுத்துக் கொண்டி ருக்கின் றோம் என்று உணர முடியும்....
H↓2O இதுதான் நாம் பொது வாக தண்ணீருக்கு பயன் படுத்தும் குறியீடு. 

ஆனால், போகிற போக்கில் இரண்டு ஹைட்ரஜன் அணுக் களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுக் களையும் சேர்த்து தண்ணீரை உருவாக்கி விட முடியாது. 

ஏனெனில் முதலில் ஹைட்ரஜன் அணு தனித்துக் கிடைப்ப தில்லை. 

ஆக்ஸிஜன் அணுவும் ஒற்றை யாக இருப்ப தில்லை (இது குறித்து தனியே சொல்கிறேன்.) இரட்டை யாகத் தான் O↓2 எனக் கிடைக்கும்.
சரி அப்படியே இரண்டும் கிடைத்து விட்டாலும் அவைகள் நிலை யான எண்ணிக் கையில் எலக்ட்ரான் களைக் கொண்ட வைகளாக இருக்கும். 

அதாவது ஆங்கி லத்தில் Saturated Level என்பார்கள். அப்படி இருக்கும் அணுக்கள்

எளிதில் எதனு டனும் வினை புரியாது. (எடுத்துக் காட்டு தங்க த்தின் அணுக்கள்)

அப்படி அவற்றை ஒன்றி ணைக்க அபரித மான சக்தி தேவைப் படும். அப்படியே ஒன்றிணைத் தாலும் தண்ணீர் உற்பத்தி யாவதோடு.. 

அபரிதமான சக்தியும் வெளிப் படும். காரணம் அணுக்கரு இணைவு (Nuclear Fusion). சமன் பாட்டைப் பாருங்கள்..

2H↓2 + O↓2 → 2H↓2O + சக்தி

சமன் பாட்டில் இருக்கி ன்றதை இது வரை எவரும் நிகழ்வில் கொண்டு வந்த தில்லை.
ஆனால் பாருங்கள்... இயற்கை... நம்மைக் கஷ்டப் படுத்தாமல்.. பூமியிலேயே எவ்வளவு தண்ணீரைத் தந்துள்ளது. 

நிலத் தடியில் நீர் குறைந்தால்... கடல் நீரானது மழை யாகப் பெய்து திரும் பவும் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள் கின்றது...

ஒரு சுத்தி கரிப்பே நிகழ் கின்றது... அதனையும் நாம் மரங் களை வெட்டி இடையூறு செய்கி ன்றோம்.. நஷ்டம் நமக்குத் தான்.
அதுவும் இல்லா விட்டால், துருவங் களில் இருக்கும் பனிக் கட்டிகள் எல்லாம் நல்ல நீரே. 
திறமை யிருந்தால் அத்தனை யையும் எடுத்துக் கொள்ள லாம். துருவ ஆராய்ச் சியாளர்கள் 

அப்பனிக் கட்டியை உருக்கி தான் தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள் வார்கள்.

தண்ணீரை உருவாக்கு கிறோம் என்று நம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்று தான் 

இயற்கையே நமக்கு தண்ணீரை வேண்டி யதற்கும் அதிக மான அளவில் தந்துள்ளது. அதனையும் கெடுத்து, 

அணுச் சேர்க்கை, அணுப் பிளவு என்று எது நடக்கக் கூடாதோ அதனையும் முயற் சிக்கும் மனிதனின் அறிவை என்ன வென்பது...?

கேள்வி: வேற்று கிரகத்தில் காற்று இருக்கிறதா என்று கண்டு பிடிக்காமல் தண்ணீர் இருக்கா என்ன்று ஏன் ஆராய்ச்சி செய்கி றார்கள்!?

பதில்: ஓ... அப்படி வருகின் றீர்களா... பொது வாக நம் சூரியக் குடும்பத் தில் இருக்கும் கோள்கள் அனைத் திலும் வளி மண்டலம் உண்டு. 
உங்களுக்கு ஒன்று தெரியுமா... 

செவ்வாய் வரைக்கும் உள்ள கோள் களில் தரை உண்டு. அதற்கப் புறம் உள்ள கோள்களை வாயுக் கோளங்கள் என்று தான் சொல் வார்கள்.

காரணம் அவைகள் இன்னும் இறுகி கெட்டிப் பட வில்லை அல்லது அவற்றின் தரையை நம்மால் இன்னும் காண முடிய வில்லை.

அப்படி மற்ற கோள்களில் உள்ள வளி மண்டலத்தில் வாயுக் களின் விகிதாச் சாரங் களை 

ஏதேனும் செய்து சமன் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்குண்டு. ஆனால் தண்ணீரை உருவாக்கிடத் தான் நம்மிடம் வழியி ல்லை.
உதாரண மாக, செவ்வாய்க் கிரகத்தில் கார்பன் டை யாக்சைடு 95.32 சதவீதம் உள்ள தாகக் கணக்கிட் டுள்ளார்கள். 

அங்கு நாம் உயிர்வாழ வேண்டு மென்றால் நமக்கு ஆக்ஸிஜன் வேண்டும். அதனை உருவாக்கிக் கொள்ள லாம். எப்படி?
தண்ணீர் மட்டும் இருக்கு மேயாயின், இங்கு நம் பூமியில் இருந்து கடற் பாசிகளைக் கொண்டு அங்கு போட்டு விட்டால் போதும், 

அவைப் பல்கிப் பெருகி, செவ்வாயின் வளி மண்டல த்தில் உள்ள கரிய மில வாயுவை உட்கொண்டு உயிர் வளியை வெளியிட்டு...

வளி மண்டல த்தில் உயிர் வளியின் விகிதத்தை அதிகரிக்கச் செய்து விடும். அப்படி ஒரு செயல் திட்டம் ஏட்ட ளவில் உள்ளது.

கேள்வி: ஆக்சிஜன் மட்டும் இருந்தா உயிர் வாழ முடியுமா!? நாம் சுவாசி க்கும் காற்றில் ஆக்சிஜன் மட்டுமா இருக்கு!

பதில்: அதான் சொன் னேனே... சுத்தமான ஆக்ஸி ஜனை நம்மால் அதிக நேரம் சுவாசிக்க முடியாது. 

ஏனெனில் நமது நுரையீ ரலின் பணி அப்படி. அப்படியே சுத்தமான ஆக்ஸிஜனைத் தொடர்ந்து சுவாசித் தால் மரணம் நிச்சயம்.
21% ஆக்ஸிஜ னோடு மற்ற வாயுக் களும் இருந்தால் தான் நம் நிம்மதி யாக சுவாசிக்க முடியும்.

கேள்வி: 21% ஆக்ஸிஜ னோடு மற்ற வாயுக் களும் இருந்தால் தான் நம் நிம்மதி யாக சுவாசிக்க முடியும்.

வேற்று கிரகத்தில் எப்படி மற்ற வாயுக் களை உருவா குவது!

பதில்: எல்லா வாயுக் களும் கலந்து தான் இருக்கும்... விகித ங்கள் தான் வேறு பட்டிருக்கும்.

மிகமிகக் குறைந்த அளவாக இருப்பின்... சற்றுக் கடினம் தான்.

வளிச் சூழலின் தன்மையைப் பொறுத்து தான் முடிவு செய்ய வேண்டும்.
கருப்பாக இருகிறீங்களா! கவலைப்படாதீங்க !
மற்ற வாயுக் களை உருவாக் குவதா.. இல்லை வேறொரு இடத்தைத் தேடுவதா என்று....

அப்படி நாம் வாழும் சூழலுக்கு ஒரு கோளை மாற்று வதை ஆங்கில த்தில் Terra Forming என்பர்.
கேள்வி: Terra Forming செய்வ தால் வேறு adverse reaction ஏதும் ஏற்படாதா?

பதில்: அருமை யான கேள்வி. புவி வரலா ற்றைப் பார்க்கும் பொழுது இது வரை க்கும் பொது வாக உயிரி னங்கள் அனைத்தும், 

சூழலு க்குத் தகுந்த மாதிரி தம்மைத் தான் மாற்றிக் கொண்டு வந்து ள்ளனவே தவிர, எந்தவொரு உயிரி னமும் புவியை மாற்ற நினைத்த தில்லை.

மனிதன் மட்டும் தான் தன் வசதிக் காக சூழலை மாற்ற நினைக் கின்றான்.
பப்பாளி விதை தரும் நன்மைகள் !
இது ஒரு விதத்தில் தன்னுடைய சக்தியைக் காட்டும் முயற்சி என்றாலும், 
இயற் கையைப் பாதிக்கத் தான் செய்யும். ஏனெனில் மனித அறிவு முழுமை யான ஒன்று அல்ல. 

இப்பொழுது செய்யும் ஒரு மாற்றம் உடனடி யான பின் விளைவு களை ஏற்படுத்தா விட்டா லும்,

காலப் போக்கில் நிச்சயம் ஒரு மாறுதலை ஏற்படுத் தத்தான் செய்யும்.

அதனை முன் கூட்டியே எதிர் பார்க்கும் திறன் நம்மிடம் குறைவு. ஒரு சிறிய எடுத்துக் காட்டு, இரசாயன உரம்.
Tags: