விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்க பிஸ்கட் !

கோழிக்கோடு விமான நிலையத்தில் கம்ப்யூட்டர் யூபிஎஸ்சில் மறைத்து வைத்து கடத்த முயன்ற, ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 
விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்க பிஸ்கட் !
பக்ரைனில் இருந்து கோழிக்கோட்டுக்கு நேற்று காலை ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வருவதாக கோழிக்கோடு 

வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை விமானம் கோழிக்கோடுக்கு வந்ததும் பயணிகள் அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது.

இதில் கோழிக்கோடு நடுவன்னூரை சேர்ந்த தஸ்லீம் (30) என்பவர் கொண்டு வந்த கம்ப்யூட்டர் யூபிஎஸ்க்குள் 6.4 கிலோ தங்க பிஸ்கட் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
இவற்றின் மதிப்பு ரூ. 2 கோடி ஆகும். தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் தஸ்லீமை கைது செய்தனர்.
Tags: