மணப்பாறையில் நகை கடையில் சங்கிலி திருடிய பெண்கள் !

மணப்பாறையில் நகைக்கடையில் ஊழியரின் கவனத்தை திசைத்திருப்பி சங்கிலி திருடிய பெண்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான கட்சியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மணப்பாறையில் நகை கடையில் சங்கிலி திருடிய பெண்கள் !
மணப்பாறையில் வடிவேல் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை உள்ளது. நகைக் கடையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டும் பணியில் இருந்த நேரத்தில் இரண்டு பெண்கள் நகை வாங்குவதற்காக வந்துள்ளனர்.

ஒரு செயினை எடுத்து எடை போட சொல்லிய பெண்கள் கடை ஊழியர் திரும்பிய நேரத்தில் மற்றொரு சங்கிலியை எடுத்து பதுக்கிக் கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து நகை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டு அவசரமாக இரு பெண்களும் வெளியேறினார். 
பின்னர் நகைகளை சரிபார்த்த ஊழியர் ஒரு செயின் குறைவதை கண்டுபிடித்தார். கேமராவில் பதிவான காட்சியை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings