பஞ்சாப் மாநிலத்தில் பேருந்துக்கு தீ வைப்பு !

பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தனியார் பேருந்துக்கு பொதுமக்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்ப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் பேருந்துக்கு தீ வைப்பு !
படோல் என்ற கிராமத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவர் இருசக்கர வாகனத்தில் லுதியானா நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

லுதியானா பெரோஷ்பூர் நெடுஞ்சாலையில் தவறான திசையில் வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் அந்த தனியார் பேருந்துக்கு தீ வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின் படி கடந்தாண்டு மட்டும் வேகமாக இயங்கிய தனியார் பேருந்துகள் மோதி 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings