சன் குழுமத்தில் எப்போது முதல் இந்தப் பிளவு ஏற்பட்டது? - சன்குழுமம் !

0
1993 -ல் கட்சியின் சொத்தை வங்கி அடமானம் வைத்து பெரும் தொகை தந்து சன் குழுமத்திற்கு வித்திட்டவர் கருணாநிதி. 


இன்று சன் குழுமத்திற்கு 14 தொலைகாட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள்,

பருவ இதழ்கள், வானொலி நிலையங்கள், 2 ஜெட் விமானங்கள் சொந்தம்.

சன் தொலை காட்சி பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக 2005 முதல் அறிவித்து கொண்டு களத்திற்கு வந்து விட்டதால்

இன்று அதன் மொத்த ஷேர்கள், அவற்றின் மதிப்பு போன்ற வற்றை கணக்கிட்டு

இந்தியாவின் முதல் 20 பணக்காரர் களில் ஒருவராக கலாநிதி மாறன் கணக்கிடப் பட்டு அறிவிக்கப் பட்டார்.

அதன் படி , சன் தொலை காட்சியில் கலாநிதி மாறனின் 90 சதவிகித பங்குகளின் மதிப்பு
சன் குழுமத்தில் எப்போது முதல் இந்தப் பிளவு ஏற்பட்டது? - சன்குழுமம் !
இன்றைய பங்கு மார்க்கெட் நிலவரப்படி, கலாநிதி யின் சொத்து மதிப்பு சுமார் 9,000 கோடி..!

அதாவது இது அதிகாரப் புர்வமான, சட்டப்படியான சன் தொலை காட்சி மூலமான சொத்து மதிப்பு மட்டும் தான்!

இதை கணக்கிட்டுத் தான் இந்தியாவின் இருபதாவது பணக்காராக கலாநிதி மாறன் அறிவிக்கப் பட்டார்.

ஆனால் சன்குழுமம் தவிர்த்த 25 நிறுவனங் களையும் அவர் நடத்தி வருகிறார்.

ஜெமினி தொலைகாட்சி , உதயா தொலைகாட்சி, தினகரன்ன்ன் குழுமம், குங்குமம் உள்ளிட்ட


பருவ இதழ்கள், எப்.எம் வானொலி நிலையங்கள் கால் கேபிள்ஸ் , கால் கம்யூனிகேஷன்ஸ்,

DMS எண்டர் டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடேட், D.K. எண்டர் பிரைசஸ் போன்ற 25 நிறுவனங் களிலும்

அவர் தான் மிகப் பிரதான பங்கு தாரர்கவும், மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி...

உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்கு தாரர்களா கவும் கொண்டு நடத்தி வருகிறார்.

இவை அனைத்தை யும் கணக்கி லெடுத்தால் கலாநிதி மாறன் குறைந்த பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதி யாகிறார்.

கலாநிதியின் எந்த ஒரு நிறுவனத்தி லும் கருணாநிதி யின் ரத்த உறவுகள் பங்கு தாரர்களாக அனுமதிக்கப்பட வில்லை என்பது கவனத்திற் குரியது.

தனது சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவி யாகவுள்ள தால்

செல்விக்கும் ஓரிரு நிறுவனங் களில் மிகச்சில பங்குகளை அனுமதித் துள்ளார்.

(ஆகவே தான் முரசொலி செல்வம் மாறன் சகோதரார் களை தீவிரமாக ஆதரிக்கிறார்)
ஆரம்பத்தில் சன் தொலை காட்சியில் கருணாநிதி யின் மனைவி தயாளு அம்மாள் பிரதான பங்குதாராக இருந்தார்.

மற்ற சிலரும் இருந்தனர். ஆனால் காலப் போக்கில் இவர்கள் எப்படி கழட்டி விடப்பட்டனர் என்ற சூட்சுமம் தெரிய வில்லை.

ஆனால் நவம்பர் 2005 -ல் அதிகார பூர்வமாக தயாளு அம்மாள் தனது 20 சதவிகித பங்குகளை விட்டுக் கொடுத்து விட்டு விலகினார் என செய்தி வெளியானது.



அதில் ஒரு பகுதியாக பத்து கோடியை தனக்கு தந்தார் என கூறிய கருணாநிதி,

அதில் ஐந்து கோடியை தன் பெயரிலான அறக்கட்டளை அமைத்து தமிழறிஞர் களுக்கு உதவப் போவதாக அறிவித்தார்.

ஆனால் 20 சதவிகித பங்கின் மூலமாக மொத்தம் சிலநூறு கோடி ருபாய் தயாளு அம்மாளுக்கு தரப்பட்டிருக்க வேண்டும்.

தயாயாளு அம்மாள் தொடர்ந் திருந்தால் இன்றைய பங்கு சந்தை நிலவரப்படி

(ஒரு பங்கின் மதிப்பு ரூ 1400) அவர் பங்கிற்கு கிடைக்க வேண்டிய தொகை இரு மடங்காகி யிருக்கும்.

வேகமாக விஸ்வ ரூபமெடுத்து வளரும் நிறுவனத்தி லிருந்த தனது பங்குகள் முழுவதையும் தயாளு அம்மாள் விருப்பப்பட்டு விலக்கி கொண்டாரா?

அல்லது வெறுப்புற்று வெளியேற நிர்பந்திக்கப் பட்டாரா என்ற தகவல் இதுவரை தெரிய வில்லை.
தயாநிதியின் தணியாத பேராசை - சன்குழுமம் !
ஆனால் சன் குழுமம் ஆக்டோபஸ் மிருகமாய் விஸ்தரித்துக கொண்டு போகும் தருவாயில்

ஆணி வேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கருணாநிதி யின் குடும்ப உறவுகளு க்கு


எந்த பலனு மில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்!

இந்த சூழலில் தான் கருணாநிதி யின் அடுத்த வாரிசு பற்றிய கருத்து கணிப்பை

நடத்தியது தினகரன் நாளிதழ். 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா...' என கருணாநிதி உசாரானார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)