ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறும் உலகின் எட்டாவது அதிசயம் என்ன?

0

உலகத்தில் எட்டாவது அதிசயம் ஒன்று உள்ளது என்பது, பலரும் அறியாத ஒன்று. அந்த எட்டாவது அதிசயம் தான் கூட்டுவட்டி (Compound Interest).

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறும் உலகின் எட்டாவது அதிசயம் என்ன?
இதைக் கூறியது, 1921-ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஒரு முதலீட்டில் ஆண்டு தோறும் கிடைக்கும் வட்டியை மீண்டும் முதலீடு செய்து வட்டிக்கு வட்டி கிடைத்தால், அது கூட்டு வட்டி.

உதாரணத்துக்கு, நாம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம் என வைத்துக் கொள்வோம்.

வட்டி (Interest) 10 சதவிகிதம் என்றால், வருடக் கடைசியில் அந்த முதலீட்டின் மதிப்பு 1,10,000 ரூபாய் (முதலீடு 1,00,000 + வட்டி 10,000). அடுத்த வருடம் இதே 10 சதவிகிதம் வட்டி கிடைத்தால்,

இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

வருடக் கடைசியில் 1,21,000 ரூபாய் என்று வளர்ந்திருக்கும் (முதலீடு 1,10,000+ வட்டி ரூ.11,000). முதல் வருடம் 10,000 ரூபாய் வட்டி என்றால், இரண்டாம் வருடம் 11,000 ரூபாயாக வட்டி உயர்ந்திருக்கும்.

உங்கள் முதலீடு ஒரு லட்சம் ரூபாய் என்றாலும், வட்டிக்கு வட்டி கிடைத்ததால் அடுத்த அடுத்த வருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

நம்மில் பலர், `என்ன சார், ஆயிரம் ரூபாய்தானே அதிகமாகக் கிடைக்கிறது' என அலட்சியமாக இதை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

உலகின் எட்டாவது அதிசயம் என்ன?

ஆனால், இதேபோல் பத்து வருடங்களுக்குத் தொடர்ந்தால், பத்தாவது வருடத்தின் உங்கள் முதலீட்டின் வட்டி 23,579 ரூபாய்.

இருபதாவது ஆண்டின் வட்டி 61,159 ரூபாய்.

முப்பதாவது ஆண்டின் வட்டி 1,58,630 ரூபாய்.

இதில் அதிசயம் என்ன வென்றால், வட்டி என்னவோ அதே 10 சதவிகிதம் தான். நம் முதலீடும் ஒரு லட்சம் ரூபாய் தான்.

ஆனால், வருடங்கள் கூடக்கூட வட்டியும் கூடிக்கொண்டே இருக்கும். இதை `Exponential Growth' என்பார்கள்.

ஒரு லட்சம் ரூபாய், 10 சதவிகிதம் வட்டியில் 30 வருடங்களுக்குப் பிறகு 17,44,940 ரூபாயாக வளர்ந்திருக்கும்.

அதே ஒரு லட்சம் ரூபாய், அதே 30 வருடங்களில் 20 சதவிகிதம் வட்டியில் 2,37,37,631 ரூபாயாக ஆக உயர்ந்திருக்கும்.

நாம் பயன்படுத்தும் பெர்பியூம் ( scent ) தேர்ந்தெடுப்பது எப்படி?

ஆம், இரண்டு கோடி ரூபாய்க்குமேல் வளர்ந்திருக்கும். இதனால் தான் கூட்டு வட்டியை ஐன்ஸ்டீன் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார்.

ஒரு குட்டிக்கதையின் மூலம் கூட்டு வட்டியின் நம்ப முடியாத சக்தியை பற்றி பார்ப்போம். 

உங்களுக்கும் உங்கள் நண்பர் ராமுவிற்கும் தலா 10 லட்சம் லாட்டரி பரிசு கிடைக்கிறது. இருவரும் அதை ஒரு வங்கி சேமிப்பில் போட்டு வைக்க முடிவு செய்கிறீர்கள்.

எளிய வட்டி வங்கி ஆண்டொன்றிற்கு 10% எளிய வட்டி தருவதாக கூறுகிறது. கூட்டு வட்டி வங்கி ஆண்டொன்றிற்கு 8% கூட்டு வட்டி தருவதாக கூறுகிறது. 

உங்கள் கணவர் எப்படி பட்டவர்? இந்த அறிகுறிகள் மூலம் கண்டுபிடியுங்கள் ! 

(இங்கு குறிப்பிட்டுள்ள வட்டி சதவிகிதம் விளக்கத்திற்காக மட்டுமே உண்மையல்ல).

ராமு எளிய வட்டி வங்கி தரும் 10% அதிகமாக இருப்பதால் தனது 10 லட்சத்தை எளிய வட்டியில் இருப்பு வைத்து விடுகிறார். 

நீங்கள் ஐன்ஸ்டீன் கூறிய வாசகத்தை முன்னரே வாசித்திருந்ததால் அதை 8% கூட்டு வட்டி வங்கியில் இருப்பு வைத்து விடுகிறீர்.

தேவதாசிகளை பற்றிய மறைக்கப்பட்ட ரகசியங்கள் !

எளிய வட்டி வங்கி ராமுவிற்கு வருடம் 1 லட்சம் வட்டியாக வழங்கும்(10 லட்சம் அசலிற்கு 10% வட்டி). உங்களது கூட்டு வட்டி வங்கி உங்களுக்கு முதல் வருடம் 80 ஆயிரம் வட்டியாக வழங்கும்.

(10 லட்சம் அசலிற்கு 8% வட்டி), 2-வது வருடம் 86 ஆயிரம் வழங்கும்(10 லட்சத்தி 80 ஆயிரத்திற்கு 8% வட்டி). வருடங்கள் போக போக உங்களது வட்டி ஏறிக்கொண்டே போகும், 

ஆனால் ராமுவிற்கு அதே வட்டி தான் வருடா வருடம் வரும். ஒரு வருடம் கழித்து ராமுவிடம் 11 லட்சங்கள் உள்ளது உங்களிடமோ 10 லட்சத்தி 80 ஆயிரம் தான் உள்ளது. 

ராமு தனது நிதி அறிவை பற்றி பெருமிதம் கொள்கிறார். உங்கள் அறியாமையை ஏளனமும் செய்கிறார்.

7-வது வருடத்தில் நீங்கள் ராமுவை முந்தி செல்கிறீர்கள். 20 வருடங்கள் கழிந்தது, ராமுவின் இருப்பில் 30 லட்சங்கள் உள்ளது ஆனால் உங்கள் இருப்பிலோ 47 லட்சங்கள் உள்ளது. 

தினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா? ஆபத்தா?

30 வருடங்கள் கழிந்தது, ராமுவின் இருப்பில் 40 லட்சங்கள் உள்ளது ஆனால் நீங்களோ 1 கோடியை தொட்டு விட்டீர்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இதனால் தான் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டியை அதிசயங்களில் ஒன்றாக கருதியுள்ளார். முதலீடு என்று வரும் பொழுது எப்பொழுதும் ஐன்ஸ்டீன் வாசகத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். 

கூட்டு வட்டி மற்றும் நீண்ட காலம் இந்த இரண்டும் சேர்ந்தால் உண்மையிலியே பல அதிசயங்களை செய்து விடும்.

பூப்படைந்த பெண்களுக்கு சிவப்பு அரிசி புட்டு தரும் நன்மைகள் !

தனது 20-களில் இருக்கும் நண்பர்கள் இது வரை எந்த முதலீடும் செய்யவில்லையெனில் உடனே ஒரு ம்யூச்சுவல் பண்டிலோ அல்லது 

நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்தோ மாதம் சிறிது தொகை முதலீடு செய்து வந்தீர்கள் எனில் உங்களது ஓய்வு காலத்தில் அது வளர்ந்து மிக பெரும் தொகையாக மாறி விடும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)