ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது - அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் !

0

கொரோனாவால் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினமானது என்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது
அதே போன்று, கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர பிற ஆண்டு மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்தினால் போது அவர்கள்தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. 

ஆனால்,  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா குறிப்பிட்டுள்ளதாவது அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், 

அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதி தான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பாலுறவுறவில் ஈடுபட்ட சகோதரிகள் ...

ஆனால் உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும்  வரவில்லை என மறுத்து  வந்த நிலையில் ஏஐசிடிஇ  கடிதம் வெளியாகியுள்ளது. 

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை  ஏற்க முடியாது என ஆக.30-ந் தேதி ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியுள்ளது.  

உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைகழகத்தின்  அங்கீகாரம் பறிக்கப்படும் எனவும் ஏஐசிடிஇ தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)