பொதுத்தேர்வு குழந்தைகள் மீதான வன்முறை - சீமான் !

0
5,8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை என்றும் இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித் திட்டம் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு


இது குறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கையில், நடப்புக் கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினை நடத்த விருப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. 

முன்னதாக, இந்தாண்டு இத்தேர்வுகள் நடத்தப்படாது என வாக்குறுதி அளித்திருந்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தற்போது அதனை மீறி நடத்த முற்படுவது வன்மையான கண்டனத்திற் குரியது.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புதிய கல்விக் கொள்கையில் இருக்கிற ஒரு கூறாகும். 

புதிய கல்விக் கொள்கை குறித்த தனது நிலைப்பாட்டை இதுவரை தெளிவு படுத்தாத நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் 

பொதுத் தேர்வினை அமல்படுத்த துணிவதன் மூலம் புதிய கல்விக் கொள்கையினை ஏற்கத் தமிழக அரசு தயாராகி விட்டது என்பதையே இது வெளிக்காட்டுகிறது. 
இத்தேர்வினை அமுல்படுத்துவதில் மற்ற மாநில அரசுகள் காட்டாத அவசரத்தை தமிழக அரசு காட்டுவதற்கு என்ன காரணம் என்று விளங்க முடியவில்லை.

ஒரு மாணவனு க்குள் இருக்கும் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து அவனை அத்துறையில் மேதையாக வளர்த்தெடுப்பதும், ஆளுமையாக உருவாக்குவதுமே கல்வியின் நோக்கமாகும். 

அதற்குப் பாடச்சுமையை மாணவனின் தோளில் ஏற்றாத, தேர்வுப்பயத்தை அவனுள் உருவாக்காத, மதிப்பெண்ணைக் கொண்டு அவனது அறிவை எடைபோடாத ஒரு தனித்திறன் முறை கல்வி வேண்டும்.
சீமான்


அத்தகைய கல்வி முறையைக் கொண்டு அருகமைப்பள்ளிகளை நிறுவி, தாய் மொழியில் பயிற்று வித்ததாலேயே கல்வியில் முதன்மை நாடுகளாகப் பின்லாந்தும், தென்கொரியாவும் நிகழ்கின்றன. 

அத்தகைய கல்வி முறையைத் தான் நாம் தமிழர் கட்சி தனது ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் வலியுறுத்துகிறது.

முன்னேறிய மேலை நாடுகள் யாவும் கல்விக் கூடங்களை நவீனப் படுத்திக் கல்வியிலே கோலோச்சிக் கொண்டிருக்கிற சூழலில், இங்குக் காற்றோட்ட மான வகுப்பறையும், 

சுகாதாரமான கழிப்பறையும், விளையாட்டுத் திடலும், அனைத்துப் பாடங்களுக்கு மான ஆசிரியருமே பெரும் கனவாக இருக்கிறது. 

இத்தகைய அடிப்படை வசதிகளையும், உட்கட்டமைப்பு களையும் உருவாக்க முனையாத தமிழக அரசு வெறுமனே தேர்வின் மூலம் மாணவர்களைத் தரப்படுத்த எண்ணுவது என்பது கொடுமை.
இந்தியாவில் நான்கு கோடியே எழுபது இலட்சம் பேர் பத்தாம் வகுப்பில் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டிருப்ப தாக 2016ஆம் ஆண்டுப் புள்ளி விபரம் கூறுகிறது. 

அவ்வாறு படிப்பைத் தொடர முடியாமல் போவதற்குரிய முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக மனஅழுத்தம் தரும் பாடச்சுமையைக் குறிப்பிடப் படுகிறது 

அவ்வறிக்கை. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுகிற பதின்பருவப் பிள்ளைகளே தேர்வு பயத்தாலும், தேர்வில் மதிப்பெண் குறைவதாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அத்தகைய நிலையில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வினைக் கொண்டு வருவது நிலையை மேலும் சிக்கலாக்கும் பேராபத்து. முதிர்ச்சியோ, 

பக்குவமோ அற்ற வயதில் பொதுத்தேர்வு வைத்து அவர்களைப் பீதியடையச் செய்வது என்பது கல்வியைத் தொடராது பாதியிலேயே அவர்கள் இடைநிற்றல் செய்வதற்கே வழிவகுக்கும்.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது அவர்கள் எத்துறையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதற்கும், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது கல்லூரியைத் தேர்வுசெய்வதற் குமான ஒரு அளவீடாகக் கொள்ளப் படுகிறது. 

அதிலும் தற்போது நீட் போன்ற தேசிய தகுதித் தேர்வு களைக் கொண்டு வந்து 12 -ம் வகுப்பு மதிப்பெண்ணே தேவையற்ற ஒன்றாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது.
பொதுத்தேர்வு வன்முறை


இத்தகைய சூழலில், எவ்விதத் தேவையுமற்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது 

மாணவர் களைக் கல்வி யிலிருந்து வடிகட்டி உயர்நிலைக் கல்வியையே நிறைவு செய்யாத நிலைக்கு இட்டுச் செல்லும் மற்றுமொரு குலக்கல்வித் திட்டமே!

தொடக்கக் கல்வியிலும், உயர் நிலைக் கல்வியிலும் தன்னிறைவை எட்ட முடியாத இந்நாட்டில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் 

பொதுத் தேர்வினைக் கொண்டு வருவது என்பது பொதுத் தேர்வுகளின் பெயரால் குழந்தைகள் மீது செலுத்தப்படும் ஆகப்பெரும் வன்முறையாகும்.

இது உளவியலாக அவர்களைச் சிதைத்து அவர்களது தனித்திறன் களையும், சமூகப் பார்வையையும் முற்றிலும் அழித்தொழிக்கும் கொடுஞ்செயல். 
ஆகவே, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மனநலன் ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் 

பொதுத்தேர்வு கொண்டு வரும் இம்முறையினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்து கிறேன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)