மேட்ரிமோனியல் சூழ்ச்சி... பெண்களுக்கு குறி - அதிர்ச்சியூட்டும் செய்தி !

0
கல்யாணத் துக்கு வரன் பார்க்க அநேக குடும்பங்கள் தற்போது நாடி செல்வது மேட்ரிமோனி இணையை தளங்களைத் தான். 
மேட்ரிமோனியல் சூழ்ச்சி... பெண்களுக்கு குறி


மணமக்களின் படிப்பு, தகுதி, சமூகம், மதம், வயது என அனைத்தும் பொருந்தும் வகையில் சத்தமின்றி வரன் தேடி திருமணத்தை முடிப்பதில் இந்த மேட்ரி மோனிக்கல் பயனுள்ளவை யாக உள்ளன.

ஆனால், இதிலும் போலியாக இணைய தளங்கள் இயங்குவ தாக நீண்ட நாட்களாக அதிர்ச்சி யூட்டும் செய்திகள் வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சேலத்தில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

சேலம் மாவட்டம் சிவதாபுரத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மகனின் திருமணத்திற் காக லட்சுமி மேட்ரிமோனி இணைய தளத்தை அணுகி யுள்ளார்.

அதில் அவரது மகனின் விவரங்களை செல்போன் எண்ணுடன் சேர்த்து பதிவு செய்தார். பின்னர் அவருடைய வாட்சப்பிற்கு நிறைய இளம் பெண்களின் புகைப் படங்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. 

அதில் இருந்து ஒரு பெண்ணை தேர்வு செய்தது ஜெய்சங்கரின் குடும்பம். பெண்ணை குறித்து 


அவருடைய பெற்றோரிடம் பேச வேண்டு மானால் எங்களது வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த இணைய தளத்தை நடத்தி வருபவர்கள் கேட்டுள்ளனர். 

ஜெய்சங்கரும் பணத்தை அனுப்பி வைத்தார். இதை யடுத்து வாட்சப்பில் அனுப்பப் பட்டிருந்த

பெண்களின் புகைப் படங்களை ஜெய்சங்கரின் மகன் முகநூலில் முகவரி அற்று பகிரப் பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சை யடைந்தார்.

பின்னர் இது குறித்து விசாரிக்க ஜெய்சங்கர் லட்சுமி மேட்ரி மோனி இணையதள எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. 

பிறகு ஏமார்ந்து விட்டோம் என்பதை அறிந்து கொண்ட ஜெய்சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)