திருப்பத்தூரில் பொங்கல் சாப்பிட்ட குழந்தைகள் பலி - நேர்ந்த சோகம் !

0
தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 
திருப்பத்தூரில் பொங்கல் சாப்பிட்ட குழந்தைகள் பலி


இந்த நிலையில் வீட்டில் செய்த பொங்கலை சாப்பிட்டு பரிதாபமாக பெண் குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்மணாங்கோயில் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு ஜெயஸ்ரீ ( 5 )தனுஸ்ரீ (3) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் இன்று இவரது குடும்பம் பொங்கல் பண்டிகையை சாமிக்கு படையல் வைத்து கொண்டாடி யுள்ளது.

பின்னர் சாமிக்கு படையல் செய்த பொங்கல் பிரசாதங்களை சுரேஷ் தனது இரு குழந்தைக ளுக்கும் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட ஜெயஸ்ரீ, தனுஸ்ரீ இருவரும் உடனே வாந்தி எடுத்து உள்ளனர்.

இதனால் பதறிப்போன பெற்றோர் அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்து மனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தனர். அங்கு மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டதாக கூறினர்.

வீட்டில் படைக்கப்பட்ட பொங்கலை சாப்பிட்டு அடுத்தடுத்து இரு குழந்தைகளும் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings