ஒடிசாவில் பொது மக்களை ஓட விட்ட காட்டு யானை !

0
ஒடிசாவில் விளை நிலங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்டி யடிக்க முயன்ற பொது மக்களை, ஒற்றை காட்டு யானை துரத்திய வீடியோ வெளியாகி யுள்ளது.


ஒடிசா மாநிலம் காராஞ்சியா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 54 யானைகள் கொண்ட கூட்டம் அருகில் உள்ள கிராமங் களுக்குள் புகுந்து அங்குள்ள மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. 

இந்நிலையில், மயூர்பஞ்ச் கிராமத்திற் குள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து உள்ளே நுழைந்த காட்டு யானை கூட்டம் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து நெற் பயிர்களை சேதப்படுத்தின. 

இதனால் ஆத்திர மடைந்த கிராம மக்கள், யானை கூட்டத்தை விரட்ட முயன்றனர். தாங்கள் விரட்டப் படுவதை அறிந்த ஒற்றை காட்டு யானை, கிராம மக்களை பதிலுக்கு துரத்தியது.

யானை துரத்துவதை கண்டு கிராம மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இதை யடுத்து வனத்துறை யினருடன் கிராம மக்களும் இணைந்து யானை கூட்டத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)