சிறுமியை கொன்று மூட்டையில் கட்டி வைத்திருந்த நபர் !

0
ஆந்திராவில் 8 வயது சிறுமியை கொலை செய்து மூட்டையில் கட்டி மறைத்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை மூட்டையில் கட்டி வைத்த நபர்


ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நல்லா குண்டா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று முன்தினம் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். 

இரவு வெகு நேரம் ஆகியும் திரும்பி வீட்டிற்கு வராததால் சிறுமியை அவரது பெற்றோர்கள் தேட ஆரம்பித்தனர்.

மேலும் ட்ரோன் கேமரா மூலமாக சுற்றுப் பகுதிகளில் தேடும் பணி நடைபெற்றது.

இதனிடையே பக்கத்து வீட்டுக் காரரான பிரகாஷின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதை யடுத்து அவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில், சிறுமி இறந்த நிலையில் ஒரு சாக்குப் பையில் மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 


பின்னர் சிறுமியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக் காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரகாஷிற்கும், சிறுமியின் தாய் ரமணம்மா விற்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாகவும்,

இருவரும் தனிமையில் இருப்பதை சிறுமி பார்த்து விட்டதால், அவர் கொலை செய்யப் பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதை யடுத்து பிரகாஷ் மற்றும் சிறுமியின் தாயிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)