மதுவை திருடி குடித்த தந்தை - மகன் செய்த கொடுர செயல் !

0
கேரளா மாவேலிக் கரையை சேர்ந்தவர் ரெவிஸ். 29 வயது நிறைந்த இவர் குடிப்பழக் கத்திற்கு அடிமையாக இருந்தார். அவரை போலவே அவரது தந்தையும் மாபெரும் மதுபிரியராக இருந்துள்ளார். 
மதுவை திருடி குடித்த தந்தை



இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெவிஸ் மது பாட்டில் வாங்கி வந்து அவரது வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இதனை கண்ட ரெவிஸ் தந்தை, அவர் வெளியேச் சென்றதும், மது பாட்டிலை எடுத்து யாருக்கும் தெரியாமல் குடித்து விட்டார். 
இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த மகன் ரெவிஸ் குடித்து விட்டு கிடந்த காலி மதுபாட்டிலை கண்டதும் பெரும் அதிர்ச்சி அடைந்து ஆத்திரம் அடைந்துள்ளான்.

இதனை யடுத்து மதுவை குடித்தது தனது தந்தை என தெரிந்ததும், ரெவிஸ் கடுப்பாகி வீட்டிற்கு வெளியே நின்ற தந்தையை சரமாரியாக அடித்து, உதைத் துள்ளார். 



இந்நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் தடுத்து தந்தையை காப்பாற்றி யுள்ளனர். மேலும் சிலர் அந்த சண்டையை வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலை தளத்தில் பதிவேற்றி யுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வெயிரலான நிலையில் இதனை கண்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)