தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி - அதிகாரிகள் விளக்கம் !

0
குஜராத் மாநிலம் காந்தி நகரில் சுபலம் ஷாலா விகாஸ் சங்குல் என்ற அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நடைபெற்ற தேர்வில் 9 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித் தாளில், ”காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?” என்று கேள்வி கேட்கப் பட்டுள்ளது. 
தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி


மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கேள்வித்தாளில் மதுபானங்கள் குறித்து சர்ச்சையான கேள்வி கேட்கப் பட்டதால், மாணவர்கள் மட்டுமல்ல கல்வி அதிகாரிகளும் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.

இது குறித்து செய்தி யாளர்களை சந்தித்த காந்தி நகரின் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வாதர் கூறுகையில்,
சுயநிதி பள்ளிகளில் நேற்று நடைபெற்ற உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக் கான கேள்வித் தாளில் மிகவும் மோசமான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. 

இந்தக் கேள்விகள் மிகவும் ஆட்சேபிக்கத் தக்கவை, கேள்வித்தாள் அமைக்கப் பட்டது குறித்து நாங்கள் ஒரு விசாரணையைத் தொடங்கி யுள்ளோம். 


விசாரணை அறிக்கை கிடைத்ததும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுபலம் ஷாலா விகாஸ் சங்குல் பள்ளிகளின் நிர்வாகத்தால் இந்த வினாத் தாள்கள் அமைக்கப் பட்டன. மேலும் மாநில கல்வித் துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)