விமான நிலையத்தில் சிக்கிய சிங்கங்களின் எலும்புகள் !

0
தென்னாப்பிரிக் காவின் ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் 342 கிலோ எடையுள்ள சிங்கங்களின் எலும்புகள் கைப்பற்றப் பட்டுள்ளன. இது தொடர்பாக மூவர் கைது செய்யப் பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித் துள்ளது.
சிங்கங்களின் எலும்புகள்


ஆசிய நாடுகள் சிலவற்றில் பாரம்பரிய மருத்துவ காரணங்க ளுக்காக சிங்கங்களின் எலும்புகள் கடத்தப் படுகின்றன. சில நேரங்களில் ஆபரணங்கள் செய்யவும் பயன்  படுத்தப் படுகின்றன.

12 அலுமினிய காகிதங்களில் அடைக்கப் பட்டிருந்த இருந்த அந்த எலும்புகள் வேறு பொருட்கள் என்று கணக்கு காட்டப் பட்டிருந்தன. இந்த 342 கிலோ எலும்புகளும் எலும்புக் கூடாக இருந்தால் அவை சுமார் 38 சிங்கங்களின் எலும்புக் கூடாக இருக்கும்.

தென்னாப்பிரிக் காவில் சுமார் 11,000 சிங்கங்கள் உள்ளன. அவற்றிலே வேட்டை யாடுதல் தடை செய்யப் பட்டுள்ள வனப் பகுதிகளில் சுமார் 3,000 சிங்கங்கள் வாழ்கின்றன.

கைதான மூவரில் இருவர் ஜிம்பாப்வே நாட்டவர்கள். இவற்றை மலேசியாவு க்கு கடத்த கைதானவர்கள் திட்ட மிட்டிருந்த தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


காட்டில் வாழாமல், அடைத்து வளர்க்கப்படும் சிங்கங்களின் எலும்புகளை ஏற்றுமதி செய்ய தென்னாப்பிரிக் காவில் அனுமதி உண்டு. ஆனால், அதற்கு அரசிடம் உரிமம் வாங்க வேண்டும்.

கைப்பற்றப் பட்டுள்ள எலும்பு களுக்கு உரிய சிங்கங்கள் காட்டில் இருந்து சட்ட விரோதமாக வேட்டையாடப் பட்டவையா, மனிதர்களால் வளர்க்கப் பட்டவையா என்று இது வரை தெரிய வில்லை.

சீனாவில் புலிகளின் எலும்பு களுக்கு சந்தை உள்ளதால், சிங்கங்களின் எலும்பு களைப் புலிகளின் எலும்புகள் என்று கூறி போலியாக விற்கப் படுவதும் உண்டு என்று பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் விசாரணை முகமை தெரிவிக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)