இரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தும் ஈறு தொடர்பான நோய் !

இன்றைய திகதிகளில் எம்மில் பலரும் தங்களது பற்களை ஆரோக்கிய மாக பராமரிப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள். 
ஈறு தொடர்பான நோய்

இந்நிலையில் ஈறு தொடர்பான பாதிப்புகள் அல்லது ஈறு நோயால் பாதிக்கப் பட்டால்... அவர்களுக்கு இரத்த அழுத்த பாதிப்பு உறுதியாக வரும் என்று கண்டறியப் பட்டிருக்கிறது.

பொதுவாக எம்முடைய வாய்ப்பகுதி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கி யத்தையும் எடுத்துக் காட்டும் சாட்சியாக திகழ்கிறது என மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். 
வாய், உதடு, நாக்கு, மேலண்ணம், கிழ் அண்ணம், பற்கள், ஈறு ஆகியவை ஏனைய உடல் உறுப்பு களுடன் தொடர்பு கொண்டிருப்ப தால் அந்த உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவை வாய் பகுதியில் அறிகுறியை வெளிப்படுத்தும்.

குறிப்பாக ஈறு பகுதியைச் சரியாக பராமரிக்கா விட்டால், பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, ஈறு தொடர்பான நோய்கள் உருவாகும். 

அண்மைய ஆய்வின்படி ஈறு பாதிப்பிற்கும், ஒருவருடைய ரத்த அழுத்த பாதிப்பிற்கும் 50 சதவீதத்திற்கு மேல் தொடர்பு இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆரோக்கிய சீர்கேடுகள் எப்போது வேண்டு மானாலும் ஏற்படக் கூடும். 
அதனால் பற்களின் ஈறுகளை ஆரோக்கிய மாக பேண வேண்டும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது வலியை உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவர் களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். 

அத்துடன் ரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். இதனை மேற்கொள்ளத் தவறினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

Tags: