முதியவரை பீர் பாட்டிலால் அடித்து கொலை - வாலிபர் கைது !

0
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூரை அடுத்துள்ள பன்னப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது70). கூலி தொழிலாளி யான இவர் பாகலூரில் காவல் நிலையம் பின்புறம் பெரியார் நகர் என்ற இடத்தில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார்.



வெங்கடேசப்பா பாகலூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த சரத்குமார் (25) என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்றிரவு இருவரும் வெங்கடேசப்பா வீட்டில் மது அருந்தி யுள்ளனர். 

அப்போது சரத்குமார் தன்னிடம் வாங்கிய ரூ.5 ஆயிரம் பணத்தை வெங்கடேசப்பா விடம் திருப்பி கேட்டார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திர மடைந்த சரத்குமார் பீர் பாட்டிலால் வெங்கடேசப்பா வின் தலையில் அடித்தார். இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே வெங்கடேசப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசப்பா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வெங்கடேசப் பாவை கொலை செய்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த சரத்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)