அரையிறுதியில் மோதும் அணிகள் எவை? - மைக்கேல் வாகன் !

0
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையிலான லீக் ஆட்டம் முக்கியமான தாக கருதப்பட்டது. இந்தியா வெற்றி பெற்றால் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு கேள்வி குறியாகி விடும் என்ற நிலைமை இருந்தது. 
அரையிறுதியில் மோதும் அணிகள் எவை?



ஆனால் முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேச அணிகளின் அரையிறுதி வாய்ப்பு கடினமாகி யுள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து போட்டிக்குப் பிறகு இந்த நான்கு அணிகள் தான் அரை யிறுதிக்கு முன்னேறும். மேலும், அரை யிறுதியில் இந்த அணிகள் தான் மோதும் என மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.
இது குறித்து மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இங்கிலாந்து - இந்தியா இடை யிலான ஆட்டத்தின் முடிவு அரை யிறுதிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா அணிகள் தான் அரை யிறுதிக்கு முன்னேறும் என்று எனக்குத் தோன்றுகிறது.



மான்செஸ்டரில் நடக்கும் முதல் அரை யிறுதியில் ஆஸ்திரேலியா (1) - நியூசிலாந்து (4) அணிகள் மோதும். பர்மிங்காமில் நடக்கும் 2-வது அரை யிறுதியில் இந்தியா (3) - இங்கிலாந்து (3) அணிகள் மோதும்’’ என்று தெரிவித் துள்ளார்.
மைக்கேல் வாகன் கணிப்பின்படி இன்றைய போட்டியில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்த வேண்டும். வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்க வேண்டும். இங்கிலாந்து நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். இது நடக்குமா? என்பது போகபோகத் தான் தெரியும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)