சிகிச்சை முடிந்து சென்னைக்கு திரும்பும் விஜயகாந்த் !

0
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா வில் இருந்து சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி யுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுக் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். 
சென்னைக்கு திரும்பும் விஜயகாந்த் !


தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறு ஆகியப் பிரச்சனைக ளால் பாதிக்கப்பட்டு இருக்கும் கடந்த சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார். இதனை யடுத்து மனைவி பிரேமலதாவுடன் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல் சிகிச்சைக் காக அமெரிக்கா சென்றார். கேப்டனின் உடல் நலக்குறை வால் அவரது தொண்டர் களும் ரசிகர்களும் மனமுடைந் தனர். 

அவர்களை உற்சாகப் படுத்த அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது கேப்டன் தன் புகைப் படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தி வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் நாளை மறுதினம் (பிப்ரவரி 16ந் தேதி) சென்னைக்கு திரும்புகிறார் என தேமுதிக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. 

அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தேமுதிக தொண்டர் களும் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றனர். கேப்டன் வந்ததும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)