பள்ளி வேனில் சிலிண்டர் வெடித்து 16 மாணவர்கள் தீக்காயம்

0
உத்தர பிரதேசத்தில் கேஸ் மூலம் இயங்கும் பள்ளி வேனில் இருந்த சிலிண்டர் வெடித்து 16 மாணவர்கள், 2 பெண்கள் காயம் அடைந்தனர். உத்தர பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தில் உள்ள கியான்பூர் நகரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
இதற்கு சொந்தமான பள்ளி வேன் ஒன்று, மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி நேற்று சென்றது. கேஸ் மூலம் இயங்கும் அந்த வேன், நாதைபூர் அருகே அருகே சென்ற போது திடீரென அதில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. 


இதை யடுத்து, வேனை ஓட்டி சென்ற டிரைவர் தப்பியோடினார். இந்த விபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 16 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற 2 பெண்களு க்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இது பற்றி அறிந்த போலீசார் மாணவர்களை மீட்டு வாரணாசி யில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. 

இதையடுத்து பள்ளி நிர்வாகியும் தலைமறை வானார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)