டயாபட்டீஸ் நோய் பற்றிய ஓர் அலசல் !



சர்வதேச அளவில் தற்போதைய நிலவரப்படி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை யில் சீனா முதலிடத்தி லும், இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. அதாவது, 6. 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நீரிழிவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 
2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10. 9 கோடியைத் தாண்டக் கூடும் என்கின்றன பல ஆய்வுகள். அப்படிப் பார்த்தால் நம்மில், 5 ல் ஒருவர் நீரிழிவு நோயாளி யாக இருப்பார். இது நம்முடைய தனிப்பட்ட பிரச்னை மட்டும் இல்லை. 

ஒட்டு மொத்த தேசத்தின் வளர்ச்சி யையே முடக்கிப் போடும் பிரச்னை என்பதை ஒவ்வொரு வரும் தெரிந்து கொள்வது அவசியம். 

நீரிழிவு பற்றி எவ்வளவு தான் சொல்லிக் கொண்டி ருந்தாலும் நீரிழிவு நோயாளி களுக்கான எளிய சோதனைகள், புதிய சிகிச்சை முறைகள், மருந்துகள் பற்றி இன்னும் போதுமான தெளிவு நம்மிடம் இல்லை.


நீரிழிவு மற்றும் நாள மில்லாச் சுரப்பி நிபுணர் ராம் குமாரிடம் இது பற்றிப் பேசினோம்…‘‘நீரிழிவு நோயாளி களில் டைப் 1, டைப் 2, கர்ப்பகால நீரிழிவு, மரபியல் நீரிழிவு என பல பிரிவுகள் உண்டு.டைப் 1 நீரிழிவு சிறு வயதினரு க்கு வரக்கூடியது. 

இவர்களு க்கு இன்சுலின் சுரப்பு அறவே இல்லாத தால், இவர்களைப் பொறுத்த வரை இன்சுலின் ஊசி மட்டுமே தீர்வு. மாத்திரைகள் மூலம் இவர்களது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது கடினம். 

இவர்கள் எளிதில் பயன் படுத்தும் வகையில், புதுப்புது இன்சுலின் வகைகள் சந்தைக்கு வந்து விட்டது. இதற்கு முன்பு வந்த இன்சுலின் ஊசிகள் போடும் போது மட்டும் சர்க்கரை அளவு குறைய வாய்ப் பிருந்தது. 

ஆனால், இப்போது வந்துள்ள இன்சுலின் ஊசிகள், உணவு உண்ட பிறகு சர்க்கரை கூடும் நேரத்தில் சரியாக வேலை செய்யத் தொடங்கும் வகையில் இருக்கிறது.

இன்சுலினில் Insulin lispro, Insulin Aspart, Glulisine என 3 வகைகள் உள்ளன. 1 முதல் 3 மணிகளில் செயல்படத் தொடங்கி 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை நீடிக்கும் இடைநிலை செயல்படும் 

இன்சுலின் (Insulin NPH) ; 1 மணி நேரத்தில் செயல்பட ஆரம்பித்து 20 முதல் 26 மணி நேரம் வரை நீண்ட நேரம் செயல்படக் கூடிய Insulin Glargine, Insulin detemir வகைகள் வந்திருக் கின்றன. 

இவை முன்பே வந்திரு ந்தாலும் கூட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தால் தற்போது பரிந்துரைக் கப்பட்டிருப் பதால் சமீப காலமாக அதிகம் புழக்கத் துக்கு வந்து விட்டது. 

ஒருவரின் தனிப்பட்ட உடல் நிலைக்கேற்ற வாறு மருத்துவர் பரிந்துரை க்கும் இன்சுலின் ஊசிக ளையே பயன்படுத்த வேண்டும். உடலினுள் இன்சுலின் செலுத்து வதற்கும் பேனா, பம்ப் போன்றவை இருக்கிறது.

இன்சுலின் பம்ப் (Insulin Pump) முறை சமீபத்திய முன்னேற்ற மாகும். சிறிய அளவில் மொபைல் போன் போல இருக்கும். 

இன்சுலின் கேட்ரெஜ்ஜை ஒரு பேட்டரியால் இயக்கக் கூடிய குழாய் மற்றும் இன்சுலின் சரியாக செலுத்துவதை கட்டுப் படுத்தும் கம்ப்யூட்டர் சிப் ஆகிய வற்றால் ஆனது தான் இந்த இன்சுலின் பம்ப். 

இதன் மூலம் உடலில் எப்போ தெல்லாம் இன்சுலின் உற்பத்தி குறைகிறதோ அதற்கேற்ற வாறு திட்ட மிடப்பட்ட நிலையான விகிதத் தில் உடலினுள் இன்சுலின் செலுத்தப் படுகிறது. 

அடிக்கடி சர்க்ரை ஏற்றத் தாழ்வு இருப்பவ ர்கள், கர்ப்ப கால நீரிழிவு நோய் உள்ள பெண்கள் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப் படுத்தவே முடியாதவர் களுக்கு இது மிகவும் உபயோக மாக இருக்கும். 

டைப் 2 நீரிழிவைப் பொறுத்த வரை மாத்திரைகள், உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி மற்றும் எடை குறைப்பு போன்ற வாழ்வியல் மாற்றங் களிலேயே சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இவர்களுக்கு கணைய த்தின் மீது செயல்படக் கூடிய, இன்சுலின் சுரப்பை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் Sulphpnylureas போன்ற மருந்துகள், 

கல்லீரலி லிருந்து வெளிப்படும் குளுக்கோஸ் அளவை குறைத்து உடலில் இன்சுலின் எதிர்ப்பை மேம் படுத்தும் Metformin மருந்துகள், இன்சுலினு க்கு தசை, கொழுப்பு செல்கள் உணர்வை அதிகரித்து 

ரத்த சர்க்கரை அளவை குறைக்கக் கூடிய Thiazolidinediones வகையைச் சார்ந்த Avandia and Actos மருந்துகளை Metformin மற்றும் Sulphpnylureas மருந்துக ளோடும் எடுத்துக் கொள்ளலாம். 

அடுத்து, கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோசாக உடைக்கும் Alpha Glucosidas மருந்துக ளைக் கொடுப்பதன் மூலம் சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் உயர் குளுக்கோஸ் அளவை தடுக்கப் படுகிறது. 2006 முதல் Gliptin அதிகமாக உபயோகிக்கப் படுகிறது.

சர்க்கரை அளவை கட்டுப் பாட்டோடு வைப்பதோடு, உடல் எடை கூடாமலும் தடுக்க 5 வகையான Gliptin மருந்துகள் பரிந்துரைக் கிறோம். 

சமீபத்தில் SGLT 2 Inhibitors (Sodium Glucose Cotransporter 2 (Gliflozins) மருந்துகள் மற்றவற்றி லிருந்து வித்தி யாசமாக வேலை செய்பவை. அதாவது மற்ற மருந்துகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் அல்லது வேலை செய்ய வைக்கும். 
ஆனால், இது உடலில் அதிகரிக்கும் குளுக்கோஸை சிறுநீர் வழியாக வெளியேற் றிவிடும். உடல் பருமனாக உள்ள நீரிழிவு நோயாளி களுக்கு எடை குறைக்கவும் உதவுகிறது. 

டைப் 1, டைப் 2, கர்ப்பகால நீரிழிவு தவிர, மரபியல் ரீதியான நீரிழிவு நோயும் உண்டு. இதை கவனிக்காமல் சில குழந்தை களுக்கு தவறுதலாக டைப் 1 நீரிழிவு சிகிச்சைக் காக கொடுக்க ப்படும் இன்சுலின் ஊசியை தொடர்ந்து செலுத்தி வருபவர்கள் உண்டு. 

முறையாக கண்டறிந்து, மாத்திரை மூலமாகவே இவர்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.’


இன்சுலின் ஊசி அல்லது வாய்வழி மாத்திரைகள் இரண்டில் எது பாதுகாப்பா னது?

‘‘டைப் 1 டயாபட்டீஸு க்கு இன்சுலின் ஊசி மட்டும் தான் தீர்வு. அதில் சந்தேகமே இல்லை. இன்சுலின் ஊசியைப் பற்றிய பல விதமான சந்தேகங் களும், பயமும் அனைவரு க்கும் இருக்கிறது. 

ஊசி போட்டுக் கொண்டால் அதற்கு அடிமையாகி விடுவோமோ, வாழ்நாள் முழுவதும் ஊசி போட்டுக் கொள்ள வேண்டி யிருக்குமோ என்று பயந்து மாத்திரை களையே சாப்பிட்டு ரத்த சர்க்கரை அதிகமாகி கோமா வரை போனவர்களும் உண்டு. 

ஊசி போட்டுக் கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும் பயப்படு கிறார்கள். தற்போது உடல் எடையை கூட்டாது, சர்க்கரை அளவை குறைக்கக் கூடிய மருந்துகள் வந்து விட்டன. 

அதே போல், எடுத்தவுடன் எல்லோரு க்கும் இன்சுலின் ஊசியை மருத்துவர் பரிந்துரைக்க மாட்டார். 4 வகையான காரணங் களுக்காக இன்சுலின் ஊசி போட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

முதலாவதாக கட்டுப்பாடே இல்லாமல் ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகும் போது, சில நேரங்களில் 2, 3 மாத்திரைகள் கூட எடுத்துக் கொள்ள வேண்டி யிருக்கும். 

அப்போதும் இவர்களால் கட்டுப் படுத்த முடியாது. அந்த தருணங்களில் ஒரு இரண்டு வார காலத்துக்கு இன்சுலின் ஊசி எடுத்துக் கொண்டு, ரத்த சர்க்கரை கட்டுப் பாட்டிற்குள் வந்த பின்பு, மீண்டும் மாத்திரை களைத் தொடரலாம். பயப்பட வேண்டிய அவசிய மில்லை. 

இரண்டாவ தாக, ஒருவருக்கு நிமோனியா போன்ற ஏதேனும் நோய்த் தொற்று ஏற்படும் போது, ரத்த சர்க்கரை அளவை உடனடியாக இன்சுலின் ஊசி போட்டு குறைத்து விட்டு நோய்த் தொற்று குறைந்த பிறகு மீண்டும் மாத்திரைக்கு மாறலாம்.

மூன்றாவ தாக, ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சந்தர்ப்பங் களில் உணவு எடுத்துக் கொள்ள முடியாத பட்சத்தில், மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவை கட்டுப் படுத்த முடியாது என்பதால் அவர்களுக்கு இன்சுலின் ஊசி கட்டாய மாகிறது. 


நான்காவ தாக, நீண்ட வருடங்களாக டைப் 2 நீரிழிவு நோய் இருந்து, தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர் களுக்கு மாத்திரைகள் வேலை செய்யாமல் சர்க்கரை அளவு கட்டுப் படாது. 

ஆரம்பத்தில் மாத்திரைகள் நன்றாக சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பது போல் தோன்றி னாலும், போகப்போக அதிகரி க்கும். இன்சுலின் சுரப்பே முழுவது மாக நின்று விட்டால், இன்சுலின் ஊசிக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படு கிறது. 

மேலும் கர்ப்பகால நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது கருவில் உள்ள சிசுவுக்கும் பரவ வாய்ப்புண்டு.

இவர்கள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது தான் பாதுகாப்பானது. இது போன்ற சூழ்நிலை களைத் தவிர, மற்ற நேரங்களில் இன்சுலின் ஊசி தேவைப் படுவதில்லை. 

இன்சுலின் ஊசி போட்டுக் கொள் பவர்கள் வீட்டிலேயே அவ்வப்போது சர்க்கரை அளவை சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காக அடிக்கடி துளையிட வேண்டி யிருக்கும். 

இவர்களுக் காகவே தற்போது சுகர் மானிட்டர் (Continuous Sugar Monitor) வந்து விட்டது. ஒரு ரூபாய் காயின் அளவிற்கு இருக்கும் இதை உடலில் பொருத்திக் கொண்டால், எப்போதும் பதிவாகிக் கொண்டே இருக்கும். 

யாருக்கெல் லாம் சர்க்கரை அளவு ஏற்றத் தாழ்வுடன் இருக்குமோ அவர்கள் மட்டும் பயன் படுத்தினால் போதுமானது.

இதன் மூலம் தாங்கள் எந்தெந்த உணவை, எந்த அளவில் எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு கூடுகிறது என்பதை கண்கா ணித்து, தங்கள் உடலைப் பற்றிய முழு புரிதலுக்கு வர உதவும். இதையும் மருத்துவரின் அறிவுரைப் படியே உபயோகப் படுத்த வேண்டும். 

இருப்பதிலேயே சிறந்ததும் எளியதுமான இன்சுலின் பம்ப் சிகிச்சை செலவு கூடுதல் என்பதால், சில மாநிலங்களில் அரசாங்கமே டைப் 1 டயாபட்டீஸ் உள்ள குழந்தை களுக்கு இலவசமாக அளித்து வருகிறது.

நம் தமிழ் நாட்டிலும் இந்த சிகிச்சையை இலவசமாக தரும் பட்சத்தில் ஏழை மக்களும் பயன் பெறுவார்கள் என்பதில் சந்தேக மில்லை !
Tags: