நீரழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ! #Complications





நீரழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ! #Complications

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
பொதுவாக நீரிழிவு தோன்றி பல வருடங்களின் பின்னரே சிக்கல்கள் ஏற்படுகின்றது.
நீரிழிவு இருப்பது ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை வழங்கப் படுமாயின் இச்சிக்கல்கள் தோன்றுவதை தடுக்கலாம்,  அல்லது பல வருடங்களுக்குப் பிற்போடலாம்.
ஆனால் பொதுவாக நீரிழிவு இருப்பது தாமதமாகவே கண்டு பிடிக்கப்படுவ தால் இச்சிக்கல்களின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன. 

எனவே இச்சிக்கல்கள் தோன்றுவதைத் தடுக்க நீரிழிவு இருப்பது நேரத்துடன் கண்டறியப்படுவதும் தகுந்த சிகிச்சை எடுப்பதும் அவசியம்.

நீரிழிவை சரியான முறையில் கட்டுப் பாட்டில் வைத்திருக்கா விடின் அல்லது உரிய முறையில் சிகிச்சை பெறாவிடின் பின்வரும் அங்கங்கள் பாதிக்கப்படும்.
இதயமும் இரத்தக் குழாய்களும்.

மூளையும் முண்ணானும் நரம்புகளும்.

சிறுநீரகம்.

கண்.

கால். 

இதயமும் இரத்தக் குழாய்களும்:

இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகளவில் இருந்தால் குருதிக் குழாய்களில் கொழுப்பு படியும் அளவு கூடும். 
இதனால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். இதனால் அப்பகுதிக்கு இரத்தோட்டம் தடைப்பட்டு அப்பாகம் செயற்படாமல் போகலாம்.
கண் பாதிக்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்த !
இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை ஊக்குவிக்கும் காரணிகள்:

இரத்தத்தில் கொழுப்பு அதிகளவில் இருத்தல்.

இரத்த அழுத்தம் அதிகளவில் இருத்தல்.

புகைப் பிடித்தல்.

இதயத்திற்கு குருதியைக் கொண்டு செல்லும் குருதிக் குழாய்கள் அடைபடுவதால் 

இதயத் தசைக்கு குருதி விநியோகம் தடைப்படுவதால் இதயத் தசை அழிவடைகின்றது. இதனால் மாரடைப்பு ஏற்படுகின்றது.
இதைத் தவிர்ப்பதற்கு:-

உடல் நிறையை சரியான அளவில் பேண வேண்டும் (BMI 23 ஆக வைத்திருத்தல்)

உடற் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.

உப்பு உள்ளெடுத்தலைக் குறைக்கவும்.

மதுபானம் பாவிப்பதைக் குறைக்கவும்.

புகைத்தலைத் தவிர்க்கவும்.

கொழுப்பு, கொலஸ்ரோல் அதிகளவுள்ள உணவுகளை உண்பதை குறைக்கவும்.
மூளையும் முண்ணாணும் நரம்புகளும்:

மூளைக்கு இரத்தத்தை வழங்கும் இரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது இரத்தக் கசிவு ஏற்படும் போது பாரிசவாதம் ஏற்படுகின்றது.
இதன் அறிகுறிகள்:

திடீரென ஒரு பக்க கைகால் அசைப்பதில் சிரமம்.

நடப்பதில் சிரமம்.

கதைப்பதில் சிரமம்.

வாய் ஒருபக்கம் இழுத்தல்.

விழுங்குவதில் சிரமம்.

தலைச்சுற்று

தடுமாற்றம்

இவ்வாறான அறிகுறி தென்படும் போது உடனடியாக வைத்தியரின் உதவியைப் பெறவும்.

விழுங்குவதில் சிரமம் உள்ளவர்களுக்கு வாயினூடாக எதையும் உண்ணக் கொடுக்கக் கூடாது. 

அப்படி கொடுத்தால் சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம்.
சிறுநீரகம்:

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள மிகவும் சிறிய குருதிக் குழாய்கள் பாதிப்படைந்து அடைபடுகின்றது. 

இதனால் சிறுநீரகத்தின் தொழிற்பாடு பாதிப்படைகின்றது. இதனால் கழிவுப் பொருட்களை வடிக்க முடியாமல் போகின்றது.  

எனவே இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்க விடாமல் பாதுகாக்க வேண்டும். 
சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படும் போது ஆரம்பத்தில் எதுவித அறிகுறியும் தென்படாமல் படிப்படியாகப் பாதிப்படைந்து இறுதியில் முற்றாக செயற்படாமல் போய்விடும். 

பின்னர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியேற்படும். இதற்கு அதிக செலவாகும்.
சிறுநீரகப் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறியலாமா?

ஆம். சிறுநீரைப் பரிசோதனை செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இது சிறுநீர் மைக்றோ அல்புயுமின் சோதனை எனப்படும். வருடத்திற்கு ஒரு முறை இச்சோதனை செய்வது சிறந்தது.

சிறுநீரகப் பாதிப்பை நாம் தடுக்க முடியுமா?

ஆம், எமது குளுக்கோஸ் மட்டத்தை சரியான அளவில் பேணுவதன் மூலமும் சரியான குருதியமுக்கத்தை பேணுவதன் மூலமும் நாம் சிறுநீரகப் பாதிப்பை தவிர்த்துக் கொள்ளலாம்.

சிறுநீரக கிருமித்தொற்று:

சிறுநீரகத்தில் ஏற்படும் மற்றைய பிரச்சினை சிறுநீரகத்தில் கிருமித் தொற்று ஏற்படுதல், சலரோகம் உள்ளவர்களுக்கு விரைவாக கிருமித்தொற்று ஏற்படலாம். 

இவர்களுக்கு சலத்தின் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டு இக்கிருமிகள் சிறுநீரகத்தை சென்றடைந்து சிறுநீரகத்தை பாதிக்கும்.
சிறுநீரக கிருமித்தொற்றை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்?

போதிளயவு நீர் அருந்த வேண்டும். சிறுநீர் கழிக்கும் போது எரிவு இருந்தால் உடனடியாக வைத்தியரிடம் சிகிச்சை பெற வேண்டும். 

வைத்திய ஆலோசனைப்படி முற்றாக சிகிச்சை பெற வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும் எனத் தோன்றும் போது சிறுநீரை கழித்தல் வேண்டும். 

சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைத்திருக்கக் கூடாது. முக்கியமாக படுக்கைக்கு போக முன்பு சிறுநீர் கழித்தல் வேண்டும்.

கண்:

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் கண்ணில் உள்ள மிகவும் சிறிய குருதிக் குழாய்கள் இதற்கு காரணம் 

கண்களின் விழித்திரையில் காணப்படும் குருதிச் சிறுகுழாய்கள் பாதிப்படைவ தாலும், விழித்திரையில் நீர்ப்பாயங்கள் சேர்வதாலும் ஆகும். 
இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம் கண் பாதிப்படை வதைத் தவிர்த்துக் கொள்ளலாம். 

நீரிழிவு நோயாளி ஒவ்வொரு வருடமும் கண் வைத்திரியடம் காட்டி சோதனை செய்ய வேண்டும்.
கால்:

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு தொடர்ச்சியாக அதிகரித்து இருந்தால் அதாவது நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கா விடில் எமது உடலில் உள்ள மெல்லிய குருதிக் குருதிக்குழாய்கள் அடைபடலாம். 

அத்துடன் நரம்புகளின் தொழிற்பாடும் பாதிப்படைய லாம் இதனால் உணர்ச்சியற்று விறைப்புத் தன்மை ஏற்படலாம். 

இதனால் இப்பகுதியில் எமக்கு நோவு, சூடு, குளிர், அசைவு என்பவற்றை எம்மால் உணர முடியாமல்ப் போகலாம். 

எமது கால்களில் ஏற்படும் சிறு சிறு காயங்களையோ அல்லது பாதணிகளால் ஏற்படும் உரசல் காயங்களையோ எம்மால் உணர முடியாமல் போகலாம். 
அத்துடன் இப்பகுதிக்கு இரத்த ஓட்டமும் குறைவாக இருப்பதால் காயங்கள் இலகுவில் மாறாது. காலில் ஏற்படும் சிறிய காயங்கள் படிப்படியாக பெரிதாகி மாறாமல் போகின்றது. 

இதனால் கால் அகற்ற வேண்டியநிலை ஏற்படலாம். எனவே இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். 

கால்களை ஒழுங்காக பரிசோதனை செய்வதன் மூலமும் இவற்றை ஆரம்பத்திலேயே இனம் காண்பதன் மூலமும் எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் (Complications) !

நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு? 

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ! 

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க ! 

இன்சுலின் மருந்து போடுவது எப்படி? 

இன்சுலின் போடும் முன் கவனிக்க வேண்டியவை !

பார்வையைப் பறிக்கும் நீரிழிவு ! 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)