நீரழிவு ஒரு பூரண விளக்கம் !

நீரழிவு நோய் என்றால் என்ன? : குருதியில் உள்ள குழுக் கொஸின் (சீனியின்) அளவு சாதாரண அளவைவிட அதிக ரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.
அதாவது ஒவ்வொ ருவரின் உடலின் செயற்பா ட்டுக்கும் சக்தியை வழங்கும் மூலப்பொ ருளான

குளுக் கோஸ் தேவையான அளவை விட அதிகமாக ரத்த த்தில் காணப்படுதல் நீரழிவு நோய் எனப் படுகிறது.

என்ன காரணத்தால் நீரழிவு நோய் ஏற்படுகிறது?

எமது உடலிலே சீனியின் அளவை வைத்துக் கொள்ளுவ தற்கும், சீனியை (குளுக் கோசை)

ரத்தத்தி லிருந்து காலங்க ளுக்குள் அனுப்புவதற்கும் இன்சுலின் எனப்படும் ஹார் மோன் (Hormone) உதவுகிறது.

இந்த இன்சுலி னின் அளவு குறைவதால் அல்லது இன்சுலினின் செயற்பாடு குறைவதால் குருதியில் இருந்து


சீனி கலங்க ளுக்குள் செல்ல முடியாமல் போவதால் ரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்து நீரழிவு உருவாகிறது.

அதாவது இன்சுலின் குறைபாடே நீரழி வுக்கான அடிப்படைக் காரண மாகும்.

இன்சுலின் குறைபாடு எப்படி ஏற்படுகிறது?

இன்சுலின் குறைபாடு இரண்டு விதமாக ஏற்படலாம். இன்சுலின் உற்பத்தி குறைதல்.

அதாவது இன்சுலினை உற்பத்தி செய்கின்ற உறுப்பான சதையி (pancrease) போதி யளவு இன்சுலி னை உற்பத்தி செய்யா மல் போதல்.

அல்லது சதையி சரியான அளவிலே இன்சுலினை உற்பத்தி செய்தாலும் அவை கலங் களிலே சரியாக தொழிற்பட முடி யாமல் போதல்.

நீரழிவு நோயின் வகைகள் ?

முதலாவது வகை நீரழிவு (Type1) - இது இன்சுலினை உற்பத்தி செய்யும் சதையி பாதிக்கப் படுவதால் போதியளவு

இன்சுலின் உற்பத்தி செய்ய ப்படாமல் ஏற்படுவது. சிறு குழந்தை களில் ஏற்படும் நீரழிவு இந்த வகையா னதாகும்.

இதற்கு மருந் தாக இன்சுலின் ஊசி வாழ்நாள் முழுவதும் ஏற்றப்பட வேண்டும். இன்சுலின் ஊசி தவிர வாய் வழி மருந்துகள் மூலம் எந்தப் பிரயோச னமும் இல்லை.

இரண்டாவது வகை நீரழிவு (Type2) -

இது இன்சுலி னின் தொழிற்பாடு குறை வதால் ஏற்படுவது. அதாவது இன்சுலின் தேவையான அளவுக்கு இருந் தாலும் கூட

அது சீனியை கலங்க ளுக்குள் செலுத்த முடியாமல் போவதால் ஏற்படுகிறது.

பெரியவ ர்களிலே ஏற்படுவது சாதார ணமாக இந்தவகை யான நீரழிவாகும்.


இதற்கு ஆரம்ப காலத்தில் வாய்வழி மூலம் உட்கொள் ளப்படும் மாத்தி ரைகள் பாவிக்கப் படலாம். இவர்களுக்கும் இறுதி கட்டத்தில் இன்சுலின் ஊசி தேவைப் படலாம்.

கர்ப்பகால நீரழிவு -

இது கர்ப்ப காத்தில் மட்டுமே ஏற்படும் நீரழிவாகும். குழந்தை பிறந்த வுடன் நீரழிவு நோய் தானாக மறைந்து விடும

ஆனாலும் குழந்தை பிறக்கும் வரை இன்சுலின் தேவைப் படலாம்.

நீரழிவு பூரணமாக சுகப்படுத்தப் படலாமா?

இல்லை. நீரழிவு நோயை பூரணமாக குணப் படுத்த முடியாது. ஆனாலும் உணவுக் கட்டுப் பாடு, மாத்தி ரைகள்

அல்லது இன்சுலின் ஊசிமூலம் இந்த நோய் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக் கப்படலாம்.

ஆகவே சில நாட்டு வைத்தி யர்கள் நீரழி வினை பூரணமாக குணப்படுத் துவதாக கூறும் விளம்பரங் களைக் கண்டு ஏமாற வேண்டாம். 

நீரழிவு நோய் உயிர் கொல்லி நோயா?


நீரழிவு நேரடியாக உயிரழப் புக்களை ஏற்ப டுத்துவ தில்லை.

ஆனாலும் இந்த நோய் கட்டுப் பாட்டுக்குள் வைத் திருக்கப் படா விட்டால் பல்வேறு வழிகள் மூலம் உயிரிழ ப்பினை ஏற்படுத் தலாம்.
ஆக பூரணமாக குணப் படுத்த முடியா விட்டாலும் வைத்திய ஆலோ சனைப்படி இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் நீண்ட நாள் சுகதேகியாக வாழ முடியும்.

எவ்வாறான வழிகளிலே இது உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம்?

நீரழிவு நோய் கட்டுப் பாட்டுக்குள் வை த்திருக்கப் படா விட்டால் இது உடம்பில் எந்தப் பகுதியை வேண்டு மானாலும் பாதிக்க லாம்.

இது தலை முடி தொடக்கம் கால் விரல் நகம் வரை பாதிப்புக் களை ஏற்படுத்த முடியும்.

இது ஏற்படுத்தக்கூடிய தீவிரமான பாதிப்புக் களாவன

1.மாரடைப்புக்கான சந்தர்ப் பத்தை அதிகரிக்கும்

2.பாரிசவாதம் (stroke) ஏற்படுவ தற்கான சந்தர்ப் பத்தை அதிகரிக்கும்

3.கண் பார்வை அற்றுப் போகலாம்

4.சிறுநீரகம் (kidney ) செயழ் இழந்து போகலாம்

5.நரம்புகள் செயல் இழப்பதால் கால் கைகளில் உணர்ச்சி குறை யலாம்.


6.உணர்ச்சி குறை வதால் கால்களில் காயங்கள் ஏற்பட்டு மோசம டைந்து காலை அகற்ற வேண்டி ஏற்படலாம்

7.உடலுறவில் பாதிப்பு ஏற்படலாம்

8.சிறுநீர்த் தொற்று ஏற்படலாம்
Tags: