நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் உள்ளதா?





நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் உள்ளதா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
பற்பசையில் கார்பன் என்றவுடன், அன்றாடம் நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் உள்ளதா? என ஆச்சர்யப் படுகின்றீர்களா? ஆர்ச்சர்யத்திற்கான விடையைக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து படியுங்கள்.
நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் உள்ளதா?
பழங்கால த்தில் மனிதர்கள் தங்கள் பற்களைச் சுத்தம் செய்ய கரி எனப்படும் கார்பனைப் பற்பொடி யாக பயன்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக கிரேக்கர்கள் இம்முறையைப் பின்பற்றி உள்ளார்கள்.

நம் நாட்டிலும் கரியை (சாம்பல்) பற்பொடியாக அன்றைக்கு முதல் இன்றைக்கு வரை பயன் படுத்துகிறோம்.

இத்தாலி, கேமரூன், நைஜீரியா, தான்சானியா, வங்கதேசம் மலேசியா போன்ற நாடுகளி லும் இவ்வழக்கம் நடை முறையில் இருந்தி ருக்கிறது.

பிற்காலத் தில் நவீன வளர்ச்சியின் காரணமாக கரியைத் தவிர்த்து வேதிப் பொருட்களை அடிப்படை யாகக் கொண்டு பற்பொடியும், பற்பசையும் உருவாக்கப் பட்டன.

அதனையே தற்போது உலக மெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கரியை மீண்டும் பற்களைச் சுத்தம் செய்யும் பொருளாக உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் விளைவாய் தற்போது கரி சேர்க்கப் பட்ட பற்பசை தயார் செய்யப்பட்டு விற்பனைக்கும் வந்திருக்கிறது. கரி சேர்க்கப்பட்ட பற்பசையின் நன்மைகள் யாவை? ஏதேனும் தீமைகள் உண்டா?

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? வாருங்கள் அறிவோம்.

சுவை மற்றும் நறுமணம் அற்ற கிளர்வுற்ற கரி (activated charcoal) எண்ணற்ற நுண் துளைகள் கொண்ட (porous) பொருளாகும்.

இதனால் அதன் புறப்பரப்பு அதிகரிப்பதுடன் பிற பொருட்களைக் கவரும் பண்பும் (absorpition) அதிகரிக்கின்றது.
இதன் காரணமாக நோயுண் டாக்கும் நுண்ணு யிரிகள் மற்றும் பற்கரை போன்ற வற்றை கிளர்வுற்ற கரி பரப்பு கவர்ந்து உடலில் இருந்து நீக்குகிறது.

எனவே கிளர்வுற்ற கரியை பற்பசையில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைப்ப தாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கரி பற்பசையின் நன்மைகள்

வாயின் துர்நாற்றம் நீக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது. பற்சொத்தை மற்றும் ஈறு சம்பந்த மான நோய்கள் வராமல் தடுக்கப் பட்டு வாயின் ஆரோக்கியம் பேணப் படுகிறது.
பற்கள் வெண்மையாக்கப் படுகின்றன. மேலும் கரி விலை மலிவான பொருள் ஆதலால் கரி சேர்க்கப்பட்ட பற்பசையின் விலையும் குறைவு.

அதே நேரத்தில் மேற்கண்ட மருத்துவ நன்மைகளின் ஐயப்பாடும் இத்துறை சார்ந்த சில நிபுண ர்களால் எழுப்பப்பட்டுள்ளன. 

அவை நோய் கிருமிகளை பரப்பு கவர்ந்து வெளிக் கொண்டு வரும் கரி, உட்கொள்ளப் படும் மருந்து களையும் பரப்பு கவர்ந்து வெளிக் கொண்டு வருகிறதா?

அப்படி நிகழுமாயின் உட்கொள்ளப்படும் மருத்தின் விளைவுகள் அற்றுப் போகும் அல்லவா? 

வாயில் உள்ள தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளை நீக்கும் கரி ஆரோக்கியத்தை உண்டாக்கும் நுண்ணுயிரிகளையும் நீக்கலாம்.

இதனால் உண்டாகும் பாதிப்புகள் யாவை?
கரி ஒரு சாணைப் பொருள் (abrasive) ஆகும். எனவே தொடர்ந்து இப்பசையைப் பயன்படுத்தினால் பற்சிப்பி (enamel) பாதிக்கப்படுமோ?

இக்கேள்வி களுக்கான விடைகள் முறையான ஆராய்ச்சி களின் மூலம் கிடைத்த பின்னரே, கரி பற்பசையின் முழுமை யான நம்பகத் தன்மையை உறுதியுடன் கூற முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர்.

அது வரையில் இப்பற்பசை பயன்பாட்டில் கவனம் தேவை என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)