நம்முடைய கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்? தெரியுமா?





நம்முடைய கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்? தெரியுமா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒரு சில மூட நம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. 
நம்முடைய கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்? தெரியுமா?
அது என்ன வென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக் கென்றால் தீமை ஏற்படும் என்றும், 

ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். 

உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூட நம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும்.

சோம்பு சேர்த்த உணவை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன?

ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத் தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற் கான அறி குறியாகும். அது மட்டு மல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். 

இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச்சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப் படியான மனஅழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள் ளுதல் மற்றும் பல காரணங்களாகும்.
நம்முடைய கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்? தெரியுமா?
சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம். சரி, இப்போது இந்த கண்துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன வென்று பட்டியலிட் டுள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, கண்கள் துடித்தால் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கண் துடிப்பில் இருந்து விடுபடுங்கள். மன அழுத்தமானது அதிகம் இருந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பிக்கும்.

எனவே மன அழுத்ததைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டால், அடிக்கடி கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் செய்வது எப்படி?

மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாவிட்டால், கண்களானது துடிக்கும்.

கண்களுக்கு அதிகப் படியான சிரமத்தைக் கொடுத்தாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். 

உதாரணமாக, படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால், அப்போது கண்களை பரிசோதித்து, அதற்கு கண்ணாடிகளை போடாமல், சிரமப்படுத்தி அப்படியே படித்து கண்களுக்கு சிரமம் கொடுத்தாலும், கண்கள் துடிக்கும். 

மேலும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப்படைந்து விடும். இதனால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்க ஆரம்பிக்கும். 

ஆகவே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது, சரியான கண்ணாடிகளை அணிந்து கொண்டு பயன்படுத்தினால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.

அதிகமாக காப்ஃபைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்ற வற்றை அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.
நம்முடைய கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்? தெரியுமா?
ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர் களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது நல்லது.

கண் வறட்சி யினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது,

காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தம், சோர்வு போன்ற வற்றால் கண்களானது வறட்சி யடைகிறது.

ஹெல்தியான சிவப்பு அவல் தரும் நன்மைகள் !

ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், கண் வறட்சியில் இருந்து விடுபடலாம். சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது.

அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளை மேற் கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும். கண் அலர்ஜி களான கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்ற வற்றின் போது, 
நம்முடைய கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்? தெரியுமா?
கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும். 

போலியான 500 ரூபாய் நோட்டை கண்டறிவது எப்படி?

ஆகவே கண் அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண் மருத்து வரை அணுகி, சரியான மருந்து களை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.
Tags: