கணவர் அழகாக இல்லாததால் நாக்கை கடித்து துப்பிய மனைவி !

0
கணவர் அழகாக இல்லாததால், அதிருப்தி அடைந்த கர்ப்பிணி மனைவி, முத்தம் கொடுத்து, 
அவரது நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 

இந்த மாநிலத்தின், ரன்ஹோலா என்ற பகுதியில் வசித்து வருபவர், கரண், 22; தெருக்கூத்து கலைஞர். இவரது மனைவி, காஜல், 22; எட்டு மாத கர்ப்பிணி.

இவர்களுக்கு, 2016ல் திருமணம் நடந்தது. கணவர் அழகாக இல்லாததால், திருமண மானதில் இருந்தே, காஜல், மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். 

இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதும், பின், சமாதான மாவதும் வாடிக்கை யாக இருந்தது.

சமீபத்தில், கரண் - காஜல் இடையே, மீண்டும் தகராறு ஏற்பட்டது. 


அப்போது, கரணை கட்டி அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்த காஜல், திடீரென அவரது நாக்கை கடித்தார். 

இதனால், கரணின் நாக்கு, பாதியளவு துண்டானது. கரணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். 

அவரை பரிசோதித்த டாக்டர்கள், 'நாக்கை பலமாக கடித்துள்ளதால், வெட்டு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 

அவர், மீண்டும் வழக்கம்போல் பேசுவாரா என்பது தெரிய வில்லை' என்றனர்.

இது குறித்து, கரணின் தந்தை அளித்த புகாரின்படி, காஜலை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings