தடுப்பூசியால் கேன்சர் உருவாகி, பாதிக்கப்பட்ட சிறுவன் பரிதாப மரணம் !

0
தடுப்பூசியால் கேன்சர் உருவாகி, பாதிக்கப்பட்ட சிறுவன் குறித்து, நமது நாளிதழில் வெளியான செய்தியால், 
 
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒன்பது மாத சிகிச்சை பலனின்றி, சிறுவன் இறந்தான்.

ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் அருகே, கொமார பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் மகன் அன்பரசு, 7; 


ஆறு மாத குழந்தையாக இருக்கும் போது, வலது தொடையில் அங்கன்வாடி மையத்தில், அம்மை தடுப்பூசி போட்டனர். 

அந்த இடத்தில் சிறிய ரத்தக்கட்டு உருவானது. சிறுவன் வளர வளர, ரத்தக்கட்டு, கட்டியாக வளர்ந்தது. 

அவனுக்கு 6 வயதான நிலையில், 3 கிலோ எடையில், கேன்சர் கட்டியாக மாறியது.

கட்டட தொழிலாளி யான ராதா கிருஷ்ணன், 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தும் குணமாக வில்லை. 

இது குறித்து, நமது நாளிதழில், ௨௦௧௭ மார்ச், 21ல் செய்தி வெளியானது. 

இதை அடிப்படை யாக வைத்து, சென்னை உயர்நீதி மன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. 

நீதிபதிகள் நாகமுத்து, அனிதா சுமந்த் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

சுகாதாரத்துறை செயலர், ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுத்தலைவர், ஈரோடு கலெக்டர், எஸ்.பி., ஆகியோரை வழக்கில் பிரதிவாதி களாக சேர்த்தனர். 

சென்னை, அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க உத்தர விட்டனர். 

கடந்த ஒன்பது மாதங்களாக, சிகிச்சை பெற்று வந்தான். நேற்று அதிகாலை, 1:45 மணிக்கு வீட்டில் இறந்தான். பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து, அன்பரசின் தாத்தா ஆறுமுகம் கூறியதாவது: 

அடையாறில் ஒன்பது மாதமாக சிகிச்சை பெற்ற நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன், நோய் அதிகரித்து விட்டது. 

இதனால், வலது காலை எடுக்க வேண்டுமென டாக்டர்கள் கூறினர். 'வலது காலை எடுத்தால், இன்னொரு கால் பாதிக்கப்படாதா?' எனக் கேட்டோம். 

'உத்தரவாதம் எதுவும், தரமுடியாது' என டாக்டர்கள் கூறினர். இதனால், அன்பரசை வீட்டுக்கு கூட்டி வந்து விட்டோம்.


கடைசியாக, தலை உட்பட அனைத்து இடங்களிலும் கேன்சர் பரவியது. நாற்பது நாட்களுக்கும் மேலாக உணவு சாப்பிட முடியாமல் இருந்தான். 

நேற்று அதிகாலை இறந்து விட்டான். இதுவே, கடைசியாக இருக்கட்டும்; இது போன்று இனி வேறெந்த குழந்தையும் பாதிக்கப் படக்கூடாது. 

யாரையும் குறை கூற விரும்ப வில்லை. ஆனால், குழந்தைக்கு போடும் தடுப்பூசி சரியானதா, 

அனுபவமிக்க ஊழியர்கள் தான் போடுகின்றனரா என, உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings