சவுதியில் மொபைல் போனால் விபத்து ஏற்படுத்தினால் தண்டனை !

சவுதியில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் உபயோகிப் பவர்களால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன, 
சவுதியில் மொபைல் போனால் விபத்து ஏற்படுத்தினால் தண்டனை !
அதே போல் சீட் பெல்ட் அணிவதன் மூலம் வாகன விபத்துக்களின் போது ஏற்படும் உயிர் மற்றும் உடற்சேதங்கள் குறைந்து காணப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் உபயோகப் படுத்தினலோ அல்லது சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ சிறையில் அடைக்கப் படுவார்கள் என்று வெளியான செய்தியை சவுதி போக்கு வரத்துத் துறை மறுத்துள்ள துடன் 

சுமார் 150 ரியால் முதல் 300 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப் படுவதுடன் கூடுதலாக 11 வகையான மாற்று தண்டனை களை விதிக்கவும் பரிசீலிக்கப் பட்டு வருவதா கவும் தெரிவித் துள்ளனர்.
அபராதத் துடன் கூடிய கூடுதல் மாற்று தண்டனை யாக மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டு பவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர் களை 'வாகன விபத்தின் மூலம் பெரும் காயமடைந் தவர்கள் சிகிச்சை பெற்று வரும் 

மருத்துவ மனை வார்டுகளை பார்வையிட அழைத்துச் செல்லப் படுவார்கள்' என்ற வித்தியாசமான தண்டனை திட்டத்தையும் நடைமுறைப் படுத்த உள்ளதாக தெரிவித் துள்ளனர்.
Tags: