பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க ஆதார்?

0
இந்தியாவில் ஃபேஸ்புக் கணக்கு துவங்குவோர் தங்களது உண்மையான பெயரை பயன்படுத்து வதை உறுதி செய்ய தங்களது ஆதாரில் உள்ள பெயரையே பதிவு செய்ய கோரும் அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க ஆதார்?
புதிய அம்சத்தின் மூலம் ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப் படும் போலி கணக்கு களின் எண்ணிக் கையை குறைக்க முடியும். 

இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் பயன் படுத்திப்பட்டு வருகிறது. உலகளவில் ஃபேஸ்புக் பயனாளிகள் அமெரிக்கா விற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

ஃபேஸ்புக் மொபைல் தளத்தில் புதிய கணக்கு துவங்கு வோருக்கு ஆதாரில் உள்ள பெயர் ('name as per Aadhaar') என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 

ஆதாரில் உங்களது பெயர் என்ன? ஆதாரில் உள்ள பெயரை பயன்படுத்தும் போது நண்பர் களால் உங்களை மிக எளிமை யாக கண்டறிய முடியும். ரெடிட் மற்றும் ட்விட்டர் பயனர்களால் முதலில் கண்டறியப் பட்டது. 
எனினும் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட வில்லை, ஃபேஸ்புக் மொபைல் தளத்தில்  மட்டும் சில வாடிக்கை யாளர்களு க்கு இந்த அம்சம் காணப் பட்டது.

'மக்கள் தாங்கள் நன்கு அறியப்படும் பெயர்களை ஃபேஸ்புக்கில் பயன் படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 

புதிதாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் போது கூடுதல் மொழிகளை வழங்கும் சோதனையில், மக்கள் தங்களது ஆதார் பெயரை பயன் படுத்துவதன் மூலம் நண்பர்கள் மற்றும் 

உறவினர் களால் அறியப்பட உதவியாக இருக்கும்' என ஃபேஸ்புக் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார். மக்கள் விரும்பி னால் பயன் படுத்திக் கொள்ளும் வசதி யுடன் இந்த அம்சம் சோதனை செய்யப் படுகிறது.

எனினும் மக்கள் தங்களது ஆதார் கார்டில் உள்ள பெயரை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கட்டாய மாக்கப்பட வில்லை. 

ஃபேஸ்புக் சேவையை மொபைலில் பயன் படுத்தி வரும் சிறிய எண்ணிக்கை யிலான வாடிக்கை யாளர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப் படுகிறது.
ஃபேஸ்புக் அதிகாரி வழங்கி யுள்ள தகவல் களின் படி ஆதாரில் உள்ள பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இதுவரை கட்டாய மாக்கப்பட வில்லை என்றாலும், ஃபேஸ்புக் பயன் படுத்துவோர் 

தங்களது உண்மையான பெயரை பயன்படுத்த வேண்டும் என்பதில் ஃபேஸ்புக் கவனமாக உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)