பிணத்துடன் உறவு கொண்ட கயவர்கள் !

உலகம் முழுவதும் இந்த நேரத்தில் ஏதோ ஓர் இடத்தில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பார். படித்தவர், படிக்காதவர் என்று வரைமுறை எல்லாம் இப்போது கிடையாது. 
பிணத்துடன் உறவு கொண்ட கயவர்கள் !
தனது உடலின் செக்ஸ் தேவைக் காக அலையும் சில ஆண்கள், எந்த இடம்... யார் என்று கூடப் பார்க்காமல் அவர்களுக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்கள் கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இது நாள் வரையில் உயிரோடு இருக்கும் பெண்ணுக்குத் தான் ஆபத்து என்று கூறிக் கொண்டி ருந்தோம். 

இப்போது இறந்த பெண்ணு க்கும் ஆபத்து வந்து விட்டது. ஆம். ஓர் இறந்த பெண்ணின் உடலுடன் உடலுறவு வைத்திருக் கிறார்கள் 

வக்கிரபுத்தி படைத்த சில ஆண்கள். இந்த வரிகளைப் படிக்கும்போதே உங்களு க்குக் கோபம் வரலாம். அவ்வளவு பெரிய கொடூரம் தான் இங்கு நடந் துள்ளது.

உத்தரப் பிரதேசம், கசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்து புதைக்கப் பட்ட பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து இரண்டு இளைஞர்கள் உறவு வைத்துக் கொண்டு ள்ளார்கள். 
இரண்டு நாட்களுக்கு முன்பு புதைக்கப் பட்ட 26 வயது பெண்ணை, புதைத்த இடத்தில் இருந்து தோண்டி யெடுத்து... 

அந்தப் பிணத்துடன் உறவு வைத்து விட்டுப் பின் அந்தப் பிணத்தை நிர்வாண மாக விட்டுச் சென்று ள்ளனர். 

இரவில் நடந்த இந்தச் சம்பவத்தை, அந்தக் கிராம மக்கள் காலையில் தான் கவனித் துள்ளார்கள். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உறவினர் களுக்கு இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனை யடுத்து, புதைக்கப் பட்ட இடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் இருந்த அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்த மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு போலீஸில் புகார் அளித்துள் ளார்கள். 

அதன்படி, அந்தப் பெண்ணைக் குழுவாகச் சேர்ந்து, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி யுள்ளனர் என்றும், 

அவர்கள் 20 அடி தூரத்தில் வைத்து இந்தச் செயலில் ஈடுபட் டுள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித் துள்ளனர். 
அந்தப் பெண்ணின் உறவினர் களை விசாரித்ததில், இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் பிரசவ வலியால் மருத்துவ மனையில் அனுமத்திக்கப் பட்டுள்ளார். 

ஆனால், பிரசவிக்கும் போது அவர் உயிர் இழந்து விட்டார். இது, எங்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி யிருக்கிறது என்று தெரிவித் துள்ளனர். 

'இந்தச் சம்பவத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டி ருக்கலாம் என்றும், 4.5 அடி பள்ளத்தைத் தோண்டி அவர்கள் எடுத்துள்ளார்கள என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப் படுகிறது. 

இது தொடர்பாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அந்தக் கிராம மக்களும் ஒன்றாக இணைந்து, 

இத்தகையக் கொடூரச் செயலைச் செய்தவர் களைத் தேடிக் கண்டுபிடித்து, தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக் கின்றனர்.
இறந்த பெண்ணுடன் உறவு கொண்டது ஒருபக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது... மறுபக்கம், கடந்த சில மாதங் களுக்கு முன்பு சென்னையில் ஓர் இளைஞர் நாயுடன் உறவு வைத்துக் கொண் டுள்ளார். 

இந்தச் சம்பவமும் அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. அதன் பின் அந்த நபர் போலீஸாரால் கைது செய்யப் பட்டார்.

சில கொடூர எண்ணம் படைத்த ஆண்களை நினைத்துத் தான் பெண்கள் பயந்து... இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியாமலும், 

பொது இடங்களில் பிடித்த உடையில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இது போன்ற சம்பவத்தால் இனி, கல்லறைகளும் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.
Tags: