உலகின் மிகப்பெரிய உயிரினம் கிரேட் பேரியர் மரணம் !

உலகில் மிகப்பெரிய உயிரினமான ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டரைக் கோடி வயதான கிரேட் பேரியர் என்றழைக்கப்படும் பவளப்பாறை உயிரிழந்தது. 
உலகின் மிகப்பெரிய உயிரினம் கிரேட் பேரியர் மரணம் !

ஆஸ்திரேலியாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் சுமார் 1,400 மைல் நீளத்திற்கு அமைந்துள்ள கிரேட் பேரியர் என்றழைக்கப்படும் பவளப் பாறையானது, கடல்வாழ் உயிரினங்களின் ஒரு முக்கிய கேந்திரமாகும்.


இந்த பவளப் பாறை 1,625 வகையான மீன்கள், 3000 வகை மெல்லுட லிகள், 3000 வகையான சிறிய பவளப் பாறை உயிரினங்கள், 220 வகையான பறவைகள் 

மற்றும் 30 வகையான திமிங் கலங்கள், டால்பின்கள் ஆகிய வற்றின் வாழ் வாதாரமாக இருந்து வந்தது. இந்த பவளப்பாறை கூட்டம் இறந்து விட்ட தாகக் விஞ்ஞானி கள் அறிவித்துள்ளனர். 

இந்த பவளப் பாறையானது இரண்டரைக் கோடி ஆண்டுகள் பழமையா னதாகும். 1400 கி.மீ நீளம் கொண்ட கிரேட் பேரியர் பவளப் பாறையின் மேல் 1,050 தீவுகள் அமைந்துள்ளன. 

விண் வெளியில் இருந்து பார்த்தால் பூமியில் நம் கண்களுக்கு புலப்படும் ஒரே உயிருள்ள அமைப்பு இது தான்.

இந்த பவளப் பாறையின் 93 சதவீத பகுதி, உலக வெப்பமய மாதலின் காரணத்தால் கடல் நீர் வெப்ப மடைந்து, அதன் காரணமாக அழிந்துள்ளது என கடல்சார் விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 


உலக அளவில் நிலவும் சுற்றுச் சூழல் சீர்கேடு, உலக வெப்ப மயமாதல் போன்றவை எந்தளவு க்கு கொடூரமாக உள்ளது என்பதற்கு இந்த பவளப் பாறையின் உயிரிழப்பே ஒரு மிகப் பெரிய சாட்சியாகும்.
Tags: