75 நாட்கள் ஜெயலலிதா எப்படி இருந்தார்? - முழு விவரம் | How she was 75 days?

சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகச் சொல்லப்படும் விளக்கம், இன்னும் பல புதிய சந்தேகங் களை உருவாக்குமா? ஜெயலலிதா மரண விஷயத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப் படும் விளக்கங்கள் அப்படியான விளைவு களையே ஏற்படுத் துகின்றன. 

75 நாட்கள் ஜெயலலிதா எப்படி இருந்தார்?


‘மருத்துவ மனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’, ‘நர்ஸ்களோடு விளை யாடினார்’, ‘காவிரிப் பிரச்னை குறித்து விவாதி த்தார்’ என்றெல்லாம் சொன் னார்கள். ‘ஜெயலலிதா எப்போது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்’ என அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி சொன்னார். ஆனால், ‘இவற்றில் எதுவுமே உண்மை யில்லை’ என்பதை இப்போது அவர்கள் தந்திருக்கும் அறிக்கைகளே அம்பலப் படுத்தி இருக்கின்றன.

ஜெயலலிதா வுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அப்போலோவின் 12 பக்க சிகிச்சை சுருக்கம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக் குழு ஐந்து முறை வந்து, சிகிச்சை பற்றி நிகழ்த்திய ஆலோ சனைகள் தொடர்பான அறிக்கை,  இவை தவிர, தமிழக அரசு சார்பில் ஓர் அறிக்கை என மூன்று அறிக்கைகள் மார்ச் 6-ம் தேதி, சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணனால் வெளியிடப் பட்டன. 

ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங் களைக் கிளப்பி ஓ.பன்னீர் செல்வம் அணியினர் உண்ணா விரதம் இருக்கும் நேரத்தில், இந்த அறிக்கைகள் வெளியாகி யுள்ளன. எனவே, இந்த அறிக்கைகளின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது. ஆனால், அந்த நோக்கத்தை இவை பூர்த்தி செய்தனவா?

ஜெ. அட்மிட் ஆனதும் அப்போலோ வெளியிட்ட முதல் அறிக்கை, ‘நீர்ச்சத்துக் குறைபாடுக்கு ஜெயலலிதா சிகிச்சை பெறுகிறார்’ எனச் சொன்னது. ஆனால், இப்போது அவர்கள் அளித்தி ருக்கும் அறிக்கை, முற்றிலும் வேறாக இருக்கிறது. மருத்துவ மனைக்கு வந்த போதே ஜெ.வுக்கு ஒன்பது பிரச்னைகள் இருந்த தாகப் பட்டிய லிடுகிறது அப்போலோ. 

செப்டிசீமியா நோய்த் தொற்று, நுரையீரல் தொற்று, இதய வால்வில் பிரச்னை, தீவிர சர்க்கரை நோய், ரத்த அழுத்தக் குறைவு, தைராய்டு குறைபாடு, ஆஸ்துமா, வயிற்றுக் கோளாறு, தோல் அரிப்பு என அந்தப் பட்டியல் நீள்கிறது. அப்போலோ ஆம்புலன்ஸ் செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டனுக்கு வந்த போதே, ஜெயலலிதா அங்கு சுய நினைவற்ற நிலையில் தான் இருந்தி ருக்கிறார். 

அவரது ரத்த அழுத்தம் தாறுமாறாக இருந்து ள்ளது. சுவாசிக்க முடியாமல் தவித்தி ருக்கிறார். செயற்கை சுவாசம் அளித்த பிறகும், அவருக்கு நினைவு திரும்ப வில்லை. சர்க்கரை நோய்க்கும், ரத்தக் கொதிப்புக்கும் பல ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார் ஜெயலலிதா. இதுதவிர, தோல் அலர்ஜி ஏற்பட்டதால் ஸ்டீராய்டு மாத்திரை களையும் அப்போது எடுத்துக் கொண்டு இருந்தி ருக்கிறார். 

‘அப்போலோ வில் அட்மிட் ஆவதற்கு ஒரு வாரம் முன்பாக அவருக்குக் கடுமையான வயிற்றுப் போக்கு இருந்துள்ளது’ என்கிறது இந்தச் சிகிச்சை அறிக்கை. அத்துடன், ‘கடுமையான சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு ஒரு வாரமாக ஜுரத்தில் அவதிப் பட்டார்’ என்றும் சொல் கிறார்கள். ‘மூச்சுத் திணறல் மற்றும் இருமல் பிரச்னையும் அப்போது அவருக்கு இருந்தது’ என்கிறது எய்ம்ஸ் அறிக்கை.

இந்த ஜுரத்துடன் அவர் எப்படி அன்று காலையில் ஓர் அரசு விழாவில் பங்கேற்றார் என்பதும், இவ்வளவு பிரச்னை களோடு இருந்தும் அவர் ஏன் முன் கூட்டியே மருத்துவ ஆலோசனை பெற வில்லை என்பதும் விடை தெரியாத கேள்விகள். ‘சிறுநீரகத் தொற்றுக்கும் ஜுரத்துக்கும் அவர் சாதாரண ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்துக் கொண்டார்’ 

என்கிறது எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் முதல் அறிக்கை. ஒரு முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை இவ்வளவு அலட்சிய மானதாகவா இருந்திருக்கும்? ‘அப்போலோ ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே போயஸ் கார்டனில் அவர் சுயநினைவு இழந்த நிலையில் தான் இருந்தார்’ என்பது இந்த அறிக்கைகள் மூலம் உறுதியாகி யுள்ளது. ‘அவர் ஏன் சுய நினைவு இழந்தார்? 

அந்த அளவுக்கு அவருக்குத் திடீரென என்ன ஆனது?’ என்ற ஓ.பிஎஸ் அணியினர் எழுப்பும் கேள்வி களுக்குத் தான் பதில் இல்லை. அட்மிட் ஆனபோது ஜெயலலிதாவின் நுரையீரலில் ஏராளமாக திரவம் சேர்ந்தி ருந்தது. இது தந்த அழுத்தம் காரணமாக, இதயம் செயல்பட முடியாமல் தவித்தது. நுரையீரலும் இதயமும் முறையாக செயல் படாததால், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தாறு மாறாகக் குறைந் திருந்தது. 

இதனால், கடுமையான மூச்சுத் திணறல் அவருக்கு ஏற்பட்டது. வேறு வழியின்றி பல ட்யூப்களால் அவர் பிணைக்கப் பட்டார். சுவாசம் தருவதற்கு ட்யூப், நுரையீரலில் சேரும் திரவத்தை அகற்று வதற்கு ஒரு ட்யூப், மருந்துகளும் திரவ உணவும் தருவதற்கு ட்யூப் என எல்லாமும் இருந்தும், பல நாள்கள் அவர் அபாயக் கட்டத்தி லேயே இருந்தி ருக்கிறார்.

இந்தச் சிகிச்சைகள் தரப்பட்டபோதே அவரது சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்து, சிறுநீர் வெளியேறும் அளவு குறைந்தது. இதற்கும் தனியாகச் சிகிச்சை தரப்பட்டது. பெரும்பாலான நாள்கள் ஜெயலலிதா மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டு இருந்திரு க்கிறார். மயக்க மருந்துகள் தரப்பட்டும் பல நாட்கள் ஜெயலலிதா தூங்க முடியாமல் தவித்தி ருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பல நாள்களில் அவருக்கு இந்தப் பிரச்னை இருந் துள்ளது. 

இரவு முழுக்கத் தூங்க முடியாமல் அவதிப் பட்டு, பகலில் தூங்கி இருக்கிறார் அவர். இயல்பான தூக்க சுழற்சி ஏன் இப்படி மாறியது என்று டாக்டர் களுக்குப் புரிய வில்லை. எய்ம்ஸ் குழு முதல் முறை வந்த போது, ஜெயலலிதா மிக அபாயமானக் கட்டத்தில் இருந்தி ருக்கிறார். அவருக்கு இதயத்தில் மைட்ரல் வால்வு பிரச்னை மோசமாக இருந்தது. 

மருத்துவமனையில் ஜெயலலிதா எப்படி இருந்தார்?


அதாவது, இதயம் சுருங்கும் போது இரண்டு திசை களிலும் ரத்தம் வெளி யேறும். இதனால், உடல் உறுப்பு களுக்குப் போதுமான ரத்தம் கிடைக்காது. இந்தப் பிரச்னைக்கு ஆபரேஷன் செய்யலாமா என ஆலோசனை செய்து, ‘நோய்த் தொற்று மோசமாக இருக்கும் இந்த நேரத்தில் ஆபரேஷன் வேண்டாம்’ என முடிவு செய்திருக் கிறார்கள்.

இவ்வளவு மோசமான நிலையில் ஜெயலலிதா வைப் பார்த்த, லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பியெல், ‘ஜெ. பிழைக்க 60 சதவிகித வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித் துள்ளார். அக்டோபர் 14-ம் தேதி ஜெ. உடல் நிலையைப் பரிசோதித்த அமெரிக்க மருத்துவர் ஸ்டுவர்ட் ரஸ்ஸல், இங்கிலாந்து மருத்துவர் ஜெயன் பரமேஸ்வர், அப்போலோ மருத்துவர் மாத்யூ சாமுவேல் ஆகிய மூன்று இதய நிபுணர் களும், 

அவருக்கு அவசரமாக ஆஞ்சியோகிராம் செய்யலாமா என ஆலோசனை செய்துள்ளனர். ஆனால், அவரது உடல் தாங்காது என்பதால் தவிர்த்து விட்டனர். அப்போலோ வில் இருந்த 75 நாட்களிலுமே, அவர் ஒரு நாள் கூட எழுந்து நடந்த தாகக் குறிப்புகள் இல்லை. ‘படுக்கை யின் ஓரமாக சாய்ந்து உட்கா ர்ந்தார்’, ‘20 நிமிடங்கள் வீல் சேரில் அமர்ந்தி ருந்தார்’ 

என இரண்டு இடங்களில் சொல்லியி ருக்கிறார்கள். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிவது, 20 நிமிடங் களுக்கு மேல் உட்கார்ந் திருப்பதே அவருக்குச் சிரமமாக இருந்தி ருக்கிறது. கால்களை லேசாக அசைப்பதே அவருக்கு பெரும் பிரயத்தன மாக இருந்தி ருக்கிறது. கிட்டத்தட்ட படுத்தப் படுக்கையாக இருந்தி ருக்கிறார். அப்போலோ அறிக்கை யில், ‘நோயாளி தனது தேவைகள் பற்றி மருத்துவக் குழுவோடு பேசினார்’ என்கிறது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை, ‘அவருக்கு நாம் சொல்வது கேட்கிறது. 

அவர் உதடுகளை அசைத்து ஏதோ சொல்ல முயற்சிக் கிறார்’ என்கிறது. அதாவது, ஜெயலலிதா பேச முயற்சி செய்திரு க்கிறார். ஆனால், உதடுகளைத் தாண்டி வார்த்தைகள் வரவில்லை. ஜெயலலிதா தனது கால்களை தன் சொந்த முயற்சி யால் அசைத்ததை மிகப் பெரிய முன்னேற்ற மாகவும் குறிப்பி டுகிறது எய்ம்ஸ் அறிக்கை. அந்த அளவுக்குத் தான் அவர் உடல் நிலை இருந்தி ருக்கிறது.

ஜெயலலிதா மரணம் அடைவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக டிசம்பர் 3-ம் தேதி, அப்போலோ வந்த எய்ம்ஸ் குழு, அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்வது பற்றி ஆலோசனை செய்தது. ஆனால், அவரின் உடல்நிலை முன்னேறிய பிறகு செய்து கொள்ளலாம் என முடிவு செய் தார்கள். ஒரு வேளை அப்போது அதைச் செய்திருந் தால், ஜெயலலிதா உயிர் பிழைத் திருக்கக் கூடும். ஆனால், அது மரணத்தை இரண்டு நாட்கள் முன் கூட்டியே வரவழைத் திருக்கவும் கூடும்.

இந்த டிசம்பர் 3-ம் தேதி விசிட் பற்றிய எய்ம்ஸ் குழு அறிக்கை, ‘ஜெயலலிதா சுயநினை வோடு இருந்தார். ஆனால், அவர் முழுமை யாக நலம் பெற பல வாரங்களோ, மாதங்களோ ஆகலாம்’ எனச் சொல்லியி ருக்கிறது. ஆனால், ‘எய்ம்ஸ் டாக்டர்கள் ஜெயலலிதா வோடு பேசினார்கள். இன்னும் நிறைய சாப்பிடச் சொல்லி அவரிடம் சொன்னார்கள்’ என்கிறது அப்போலோ அறிக்கை. தாங்கள் ஜெ-விடம் பேசியதாக எய்ம்ஸ் டாக்டர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட வில்லை. 

மொத்தத்தில், ‘ஜெயலலிதா வீடு திரும்புவதை அவரே முடிவு செய்வார்’ என பிரதாப் ரெட்டி சொன்ன போது, அவர் அதற்கான நிலைமை யில் இல்லை என்பது தான் உண்மை. அதேநாளில் அவருக்கு நோய்த் தொற்றும் மூச்சுத் திணறலும் மோசமானது. அவருக்கு நிமோனியா தாக்கி யிருப்பதை அப்போது தான் டாக்டர்கள் கண்டறி ந்தார்கள். வென்டி லேட்டரில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளித்தார்கள்.

டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.20-க்கு டி.வி பார்த்துக் கொண்டிருந் தபோது, ஜெயலலிதா வுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வேக வேகமாக அவர் மூச்சை இழுத்து விட்டார். ‘டாக்டர்கள் உடனே தீவிரச் சிகிச்சை அளித்தனர். மார்புக் கூட்டைப் பிளந்து எக்மோ கருவியும் பேஸ்மேக் கரும் பொருத்தி, அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயன்றனர். 

ஆனால், ‘அதன்பின் ஆபரேஷன் தியேட்டரு க்கு அழைத்துச் சென்றும் ஏதும் பலன் இல்லை’ என்கிறது அப்போலோ அறிக்கை. ‘ஜெயலலிதா வுக்கு டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது’ என்கிறது எய்ம்ஸ் குழு அறிக்கை. இதில் நேரத்தை, தனது பேனாவால் திருத்தி, அங்கும் ஒரு கையெழுத்து போட்டிரு க்கிறார், 


எய்ம்ஸ் குழுத் தலைவர், டாக்டர் கில்னானி. (ஆனால், அப்போலோ அறிக்கை யில் எந்த நேரத்தில் ஜெயலலிதா வுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது என எதுவும் சொல்லப்பட வில்லை.) டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணிக்கு எய்ம்ஸ் குழு ஜெயலலிதா வைப் பார்த்தது. எக்மோ கருவியின் செயல் பாட்டை நிறுத்தினால், 

ஜெயலலிதா வின் ரத்த அழுத்தம் தாறு மாறாகக் குறைந்தது. எனவே, அவரது இதயம் செயல்பட வில்லை என முடிவுக்கு வந்தனர். பேஸ்மேக்கர் கருவியை நிறுத்தியதும், ஈ.சி.ஜி பதிவுகள் நேர்க்கோடாக வந்தன. எனவே, அவர் மூளைச்சாவு அடைந்து விட்டார் என்று முடிவு செய்தனர். 

அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் சசிகலா விடமும், தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர் களிடமும் இந்த விவரம் தெரிவிக்கப் பட்டது. அவர்களில், ஓ.பன்னீர் செல்வமும் ஒருவர். சசிகலா குடும்பம் மட்டுமல்ல... அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவ மனை, லண்டன் மருத்துவர், மாநில அரசு, மத்திய அரசு ஆகிய அனைவரும் மக்கள் காதில் பூ சுற்று கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
Tags: