எரிந்த காரணம் என்ன? ரேஸ் கார் ரகசியங்கள் !

மார்ச் 18-ம் தேதி அதிகாலை இப்படி ஒரு செய்தியுடன் தமிழகம் விழித்தெழும் என யாரும் எதிர்பார்க்க வில்லை. இளம் வயதிலேயே இந்திய அளவிலான கார் பந்தயங்களில் சாதனைகள் புரிந்து வந்த அஸ்வின் சுந்தரும்,
எரிந்த காரணம் என்ன? ரேஸ் கார் ரகசியங்கள் !
அவருடைய மனைவி நிவேதிதாவும் காருக்குள் கருகி மரண மடைந்துள்ளனர். சென்னையில் நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக விரைந்து சென்ற அந்தக் கார், மரத்தில் மோதி எரிந்த சம்பவம், 

பல சந்தேகங் களைக் கொளுத்திப் போட்டுள்ளது. டிரைவிங்கில் அனுபவம் வாய்ந்த அஸ்வின், காரை வேகமாக ஓட்டினாரா... 

கதவை ஏன் திறக்க முடிய வில்லை... ஒரு கார் விபத்துக்கு உள்ளானால் உடனே தீப்பிடித்துக் கொள்ளுமா எனப் பல கேள்விகள் முன் வைக்கப் படுகின்றன.

அஸ்வின் ஓட்டிச் சென்றது, 2012 மாடல் பி.எம்.டபிள்யூ Z4 கார். அது, இரண்டு பேர் அமரக் கூடிய ஸ்போர்ட்ஸ் கார். 

சாந்தோம் பகுதியில் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் இருக்கும் ஒரு வேகத்தடை எவ்வளவு மோசமானது என்பது, தினமும் அதைக் கடந்து செல்லும் அனைவருக்கும் தெரியும். 

அந்த வேகத் தடையில், சுமார் 120 கி.மீ வேகத்தில் அஸ்வினின் கார் ஏறியுள்ளது. இவ்வளவு வேகத்தில் சென்றால், எந்த வாகனமாக இருந்தாலும் அது, கட்டுப் பாட்டை இழக்கத் தான் செய்யும். 
அஸ்வின் காரும் கட்டுப்பாட்டை இழந்தது. அது, மரத்துக்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கி, உடனே தீப்பிடி த்துக் கொண்டது. 

காருக்குள் இருந்து வெளியேற முடியாமல், அல்லது விபத்தின் அதிர்ச்சியால் நினைவை இழந்த, அஸ்வினும், நிவேதிதாவும் தீயில் கருகி உயிரிழந்தனர். 

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிவது உலக அளவில் மிக மிக அரிதான நிகழ்வு. ஆனால், இந்தியாவில் அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

2012-ல் புனேவில் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ கார் ஒன்று, தானாகத் தீப்பிடித்து எரிந்தது. கதவு லாக் ஆகி விட்டது. காரை ஓட்டியவரால் கதவைத் திறக்க முடியவில்லை. 

சீட்பெல்ட் டையும் கழற்ற முடியவில்லை. கண்ணாடியை உடைத்து, சீட் பெல்ட்டை கிழித்து ஓட்டுநர் மீட்கப்பட்டார். ஆனாலும், தீக்காய ங்களால் அவர் இறந்து போனார். 

2014-ம் ஆண்டு டெல்லியில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளாகி, தீப்பிடித்துக் கொண்டது. அதில், மனநலம் பாதிக்கப் பட்ட இரு சகோதரர்கள் சிக்கி உயிரிழந்தனர்.

பொதுவாக, நவீன வசதிகள் கொண்ட கார்களின் கதவுகள், விபத்து நிகழ்ந்தால் தானாகவே திறந்து கொள்ளும். அதற்கேற்ப, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

அதே நேரத்தில், விபத்தின் தன்மையைப் பொறுத்து, கதவு ‘ஜாம்’ ஆகிவிடு வதற்கும் வாய்ப்புள்ளது. 2009-ம் ஆண்டு, அகமதாபாத்தில் பி.எம்.டபிள்யூ கார் ஒன்று விபத்தில் தீப்பிடித்துக் கொண்டது. 

அதில், சென்ட்ரல் லாக்கிங் செயலிழந்து விட்டது. காரில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர். என்ன கொடுமை யென்றால், அந்த நான்கு பேருமே பி.எம்.டபிள்யூ மெக்கானிக் குகள் என்பது தான். 
2015-ம் ஆண்டு, மலேசியாவில் இதே Z4 மாடல் கார் ஒன்று தானாகத் தீப்பிடித்து எரிந்தது. நல்ல வேளையாக உயிர்சேதம் எதுவும் இல்லை.

இந்த விபத்தில், எப்படி சில நொடிகளில் அஸ்வினின் கார் தீப்பிடித்தது என்பதுதான் விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய மான கோணம்.

மாடர்ன் கார்கள் இவ்வளவு எளிதாகத் தீப்பிடிக்காது. விபத்து நிகழ்ந்தால், இன்ஜின் செயல் பாட்டையும், எரிபொருள் பம்ப் செய்யப் படுவதையும் மின்சார கட்டுப்பட்டுப் பிரிவு நிறுத்தி விடும். 

எனவே, வேகக்கட்டுப் பாட்டுப் பகுதியில் அதிவேக மாக மோதி, கார் கீழே விழுந்த போதே எரிபொருள் டேங்க்கி லிருந்து பெட்ரோல் கசிந்து, கார் தீப்பிடித் திருக்க வாய்ப்புண்டு. 

அல்லது, வேகத்துக்காக இன்ஜினை மாற்றி அமைத்தி ருந்தாலும் விபத்துகளின் போது தீப்பிடிப் பதற்கான வாய்ப்புகள் உண்டு. 

நவீன கார்களின் இன்ஜினை மாற்றி யமைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எலெக்ட்ரானிக் சிப் டியூனிங்கைத் தான் பலர் கையாளு கிறார்கள். 
எனவே, அஸ்வின் அல்லது விபத்துக்கு உள்ளான காருடைய முந்தைய உரிமையாளர், இன்ஜினை டியூன் செய்தார்களா என்பதை விசாரித்தால் தீப்பிடித்ததற்கான காரணம் தெரிய வரலாம்.

இந்த விபத்து குறித்த நம்முடைய கேள்விகளுக்கு, இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும் வரை பி.எம்.டபிள்யூ நிறுவனத் திடமிருந்து பதில் வரவில்லை. 

தகுதியான நிபுணர்கள் சுதந்திரமாக ஆராய்ந்தால் மட்டுமே இந்த விபத்துக் கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
காரோட்டிகளுக்கு சில டிப்ஸ்:

* காரில் பொருத்தக் கூடிய தீயணைப்புக் கருவி எப்போதும் இருக்க வேண்டும்.

* கேனில் எரிபொருளை நிரப்பி எடுத்துச் செல்லாதீர்கள்.

* சட்டத்துக்குப் புறம்பாக இன்ஜினை மாற்றி யமைக்காதீர்கள்.

*காருக்குள் சிகரெட் புகைக்கவே கூடாது.

* காரின் சென்ட்ரல் லாக் ஜாம் ஆகிவிட்டால், ஹெட்ரெஸ்ட்டைக் கழற்றி, ஜன்னல் கண்ணாடியை உடைக்கலாம்.
Tags:
Privacy and cookie settings