காதலி மட்டுமா, பெற்றோரையும் கொன்றேன்... இளைஞர் !

போபால் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த காதலியை கொலை செய்ததுடன், 6 வருடங்களுக்கு முன்பு தனது பெற்றோரையும் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
காதலி மட்டுமா, பெற்றோரையும் கொன்றேன்... இளைஞர் !
உத்யன் தாஸ் என்ற இளைஞர், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி, தன்னுடன் லிவ்விங் டூகெதர் உறவில் இருந்து வந்த தனது காதலி ஆகான்ஷா ஷர்மாவை கொன்று புதைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்டார்.

இவரிடம் போபால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 6 வருடங் களுக்கு முன்பு தனது பெற்றோரையும் கொலை செய்து ராய்பூரில் உள்ள வீட்டில் புதைத்ததை ஒப்புக் கொண்டதாக தெற்கு போபால் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் பகுகுணா தெரிவித்தார்.

இது குறித்து, உத்யன் தாசிடம் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராய் விளக்கம் பேசுகையில், கடந்த 2010ஆம் ஆண்டு ராய்ப்பூரின் சாந்தி நகர் பகுதியில்
உள்ள வீட்டில் தனது பெற்றோரை கொலை செய்து புதைத்ததாகவும், தனது சொந்த வாழ்க்கைக்கு அவர்கள் இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாகவும் உத்யன் தாஸ் கூறியதாக தெரிவித்தார்.
Tags: