மாத்திரைகள் ஏன்? எதற்கு? எப்படி பயன்படுத்துவது?

சாப்பாட்டுக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்தி ரையை மறந்து விட்டால், சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொள்ளலாமா? மாத்திரை களின் பக்க விளைவு களைத் தவிர்ப்பது எப்படி?
மாத்திரைகள் ஏன்?
தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள் கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? வைட்டமின் மாத்திரை களை நாமே எடுத்துக் கொள்ள லாமா? 

மாத்திரை கள் பற்றி இதுபோன்ற சந்தேகங்கள் எல்லோ ருக்கும் எழுவ துண்டு. நாளமில்லா சுரப்பிகள் மருத்து வரான பரத் இந்தக் குழப்பங் களுக்கு விளக்க மளிக்கிறார்.
சத்துக் குறைபாடு காரண மாகவோ, எதிர்ப்பு சக்தி குறைவதன் காரண மாகவோ உடலில் நோய் ஏற்படு கிறது. 

அந்த வேளையில் சில வேதிப் பொருட்களின் உதவியுடன் உடல் நிலையை சமன் படுத்து கிறோம்.

அதற்குப் பெயர்தான் மாத்திரை. வட்டம் அல்லது நீள்வட்டம், கேப்ஸ்யூல் என வடிவத்தைப் பொறுத்த வரை மாத்திரைகள் இருவிதமாக இருக்கின்றன. 
இதில் இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தால் நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் (Water soluble), கொழுப்பில் கரையக் கூடிய மாத்திரைகள் (Fat soluble) என்று இரு விதங்கள் உண்டு.

ஒரு வேளைக் கான மாத்திரை தவறினால் அப்படியே விட்டு விடுவது தான் நல்லது. அடுத்த வேளைக்கு சேர்த்து எடுத்துக் கொள்வ தால் பலன் இல்லை... பக்க விளைவு தான் உண்டு. 

கால்சியம் மாத்திரை யை ஒன்றுக்குப் பதிலாக இன்னொ ன்றைச் சேர்த்து எடுத் தாலும் அந்த இன்னொன்று கழிவுப் பொருள் தான். 

அதே போல், சர்க்கரை நோயாளி கள் சிலர் காலையில் தவற விட்ட மாத்திரை யை இரவில் சேர்த்து எடுப் பார்கள். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் அபாயம் ஏற்படலாம்.

ஆன்டி பயாடிக் வகை மாத்திரைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் எடுத்தால் போதும். 

ஹார்மோன் குறைபாடு களுக்கான மாத்திரை களை மட்டும் தொடர்ந்து எடுக்க வேண்டி யிருக்கும். சில மாத்திரை களைத் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். 
மாத்திரைகள் எப்படி பயன்படுத்துவது?
காரணம், மாத்திரை உணவுக் குழாயில் தங்கி விடாமல் சிறுகுடல் பகுதிக்கு முழுமை யாகச் சென்று சேர வேண்டும் என்பது தான். 

இல்லாத பட்சத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 கிளாஸ் தண்ணீ ராவது பருக வேண்டும். உணவுக் குழாயில் மாத்திரை தேங்கி விட்டால் புண் உண்டாகி விடலாம்.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி மாத்தி ரைகளை நீரில் கரையக் கூடிய மாத்திரைகள் என்றும் வைட்டமின் ஏ, டி, ஈ, கே மாத்திரை களை கொழுப்பில் கரையக் கூடிய மாத்தி ரைகள் என்றும் பிரிக்கலாம்.

நீரில் கரையக் கூடிய மாத்திரைகள் பக்க விளைவுகள் அற்றவை. ஏனெனில், உடலி லிருந்து குறிப்பிட்ட நேரத்தில் கழிவாக வெளியேறி விடும். 

ஆனால், கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் மாத்திரைகள் உடலில் இருக்கும் கொழுப்புப் பகுதியில் சென்று அப்படியே தங்கி விடும். 

அதனால் தான் வைட்டமின் மாத்திரை களைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவ ர்கள் அறிவுறுத் துகிறார்கள்.
சில மாத்திரை களை உணவுக்கு முன்னும், சில மாத்திரை களை உணவுக்குப் பின்னும் மருத்து வர்கள் எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். 

அதற்குக் காரணம் நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் தான். 

நாம் சாப்பிடு வதற்கு முன்பு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் சுரப்பும் வீரியமும் அதிகமாக இருக்கும். உணவு உண்டபின் அதன் வீரியம் குறைவாக இருக்கும். 

கால்சியம், இரும்புச்சத்து மாத்திரைகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைந்தால் தான் பலன் தரும். 

அந்த வகை மாத்திரை களை ஹைட்ரோ குளோரிக் அமிலம் வீரியமாக இருக்கும் போது, அதாவது, உணவுக்கு முன்பு எடுத்துக் கொண்டால் தான் பலன் கிடைக்கும். 

சில மாத்திரை களின் வீரியத்தை ஹைட்ரோ குளோரிக் அமிலம் தடுத்து விடும். அந்த வகை மாத்திரை களை உணவுக்குப் பின் 

அதாவது, அமிலத் தன்மை குறைந் திருக்கும் போது தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘மருத்துவர்கள் நிறைய மாத்திரை எழுதிக் கொடுக்கி றார்கள். 

ஒரு வேளை, இரண்டு வேளை சாப்பிட்டால் போதாதா’ என்று பலரும் நினைக் கிறார்கள். அதே போல, நோயின் அறிகுறிகள் மறைந்த உடனே மாத்திரை யையும் பலர் நிறுத்தி விடுகி றார்கள். 
இந்த இரண்டும் தவறானதே. ஒரு வாரத்துக் கான மாத்திரை களை மருத்துவர் பரிந்துரை க்கும் பட்சத்தில் அந்தக் கால அளவு முழுவதும் எடுத்துக் கொள்வது அவசியம். 

அப்போது தான் நோய்க் கிருமிகள் முழுமையாக நீங்கும். பாதியில் மாத்திரைகளை நிறுத்தும் போது பாதி நோய்க் கிருமிகளும் தப்பித்து விடும். 

இதனால் நாம் ஏற்கெனவே உட்கொண்ட மருந்துக ளின் சக்தியைத் தாண்டி புது எதிர்ப்பு சக்தியைப் பெற்று விடும்.

வைட்டமின் டி பற்றாக் குறைக்கான மாத்திரை களை மருத்துவரின் ஆலோ சனை இல்லாமல் பலரும் எடுக்கிறார்கள். 

வாரம் ஒருமுறை எடுக்க வேண்டிய மாத்திரையை தினமும் உட்கொள்கி றவர்களும் உண்டு. 

இதனால் கால்சியம் சத்து உடலில் அதிகமாகி சிறு நீரகத்தில் கல் ஏற்படுவது முதல் சிறுநீரகச் செயல் இழப்பு வரை பல்வேறு பாதிப்புகள் உண்டாகக் கூடும். 

வைட்டமின் ஏ மாத்திரை களால் மூளையில் நீர் கோர்த்துக் கொள்வது, வாந்தி ஏற்படுவது, கண் பார்வை மங்குவது போன்ற பக்க விளைவுகள் உண்டாகும். 

வைட்டமின் ஈ மாத்திரை களால் இதயம் பாதிக்கும் என்பது பற்றிய ஆய்வுகளும் இருக்கிறது.
தொடர்ச் சியாக மாத்திரை சாப்பிடுகி றவர்களும் குறிப்பிட்ட இடை வெளியில் மருத்து வரைச் சந்திப்பதே நல்லது. 

இதே மாத்திரை தானே மருத்துவர் எழுதிக் கொடுப்பார் என்று நாமே வாங்கிப் பயன் படுத்தக் கூடாது. 

மருத்துவரின் கண்காணிப்பு இருக்கும் பட்சத்தில் அந்த மாத்திரை யால் பக்க விளைவுகள் வருகிறதா என்று ஆராய்ந்து தான் மீண்டும் அதே மாத்திரைகளைப் பரிந்து ரைப்பார்.

ரத்த அணுக்க ளின் எண்ணிக்கை, கல்லீரலின் செயல்பாடு, சிறு நீரகத்தின் ஆரோக்கியம் போன்ற வற்றையும் தொடர்ந்து மாத்திரை கள் எடுத்துக் கொள்கிற வர்கள் பரிசோதி த்துக் கொள்ள வேண்டும். 

சத்தான உணவு முறையைப் பின் பற்றுவதும் அவசியம். சூரிய ஒளியும் காற்றும் பட்டு விட்டால் சில மாத்திரைக ளின் வீரியம் போய் விடும். 
எனவே, இந்த மாத்திரை களை கவனமாகக் கையாள வேண்டும். சில்லறை யாக அவ்வப் போது வாங்காமல் மொத்தமாக வாங்குவதே பலன் தரும்.

உதாரணம், தைராய்டு மாத்திரைகள். 

மாத்திரை களை முறையாகப் பயன் படுத்தினாலே எந்த பக்க விளைவு களும் வராது. 

தலை வலியாக இருந்தாலும் என்ன காரணத்தால் தலைவலி வந்தது என்று மருத்து வரைச் சந்தித்து தெளிவு பெறுவதே சரியானது. 

மருத்துவர் பரிந்துரைக் காமல் எந்த மாத்திரை யையும் நாம் பயன் படுத்தக் கூடாது. நமக்கு நாமே மருத்துவம் பார்க்கிற அளவுக்கு நாம் மருத்துவர் இல்லை என்பதையும் உணர வேண்டும்!
Tags: