நாடாருக்கு துரோகம் செய்கிறது அதிமுக.. சசிகலா புஷ்பா !

தூத்துக்குடி மேயர் பதவியை தலித்துக ளுக்கு ஒதுக்கி நாடார் சமுதாயத்தி னருக்கு துரோகம் செய்திருக் கிறது அதிமுக என்று சசிகலா புஷ்பா எம்.பி. கொந்தளித் துள்ளார்.
நாடாருக்கு துரோகம் செய்கிறது அதிமுக.. சசிகலா புஷ்பா !
சென்னை யில் என்கவுண்ட ரில் கொல்லப் பட்ட வெங்கடேஷ் பண்ணை யாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப் பட்டது. 

இதில் கலந்து கொள்வதற் காக தூத்துக்குடி க்கு வந்திரு ந்தார் சசிகலா புஷ்பா. அவரைக் கைது செய்ய போலீஸா ரும் திட்ட மிட்டுக் காத்திரு ந்தனர்.

ஆனால் உச்சநீதி மன்றம் அதிரடியாக தடை உத்தரவு போட்ட தால் போலீஸார் கைது செய்யும் முடிவைக் கை விட்டனர். இந்த நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு ஒரு பெரிய இளைஞர் படையே பாதுகாப்பாக வந்தி ருந்தது. 

விமான நிலையம் முதல் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரத் தில் உள்ள பண்ணை யாரின் நினைவிடம் வரை அவர்கள் பாதுகாப்பாக சென்றனர். 

அங்கும் சசிகலா வைப் பார்க்க பெரும் கூட்டம் கூடி ஆர்ப்பரித் தபடி காணப் பட்டது. ஒரு அரசியல் தலைவர் ரேஞ்சுக்கு சசிகலா புஷ்பாவு க்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. 
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாள ர்களிடம் சசிகலா புஷ்பா பேசுகையில், சென்னை மேயர் பதவியை தனித் தொகுதியாக அறிவித்து தலித் மக்களை உயர்த்தியி ருக்கலாம்.

ஆனால் நாடார் சமுதாயத்தி டமிருந்த தூத்துக்குடி மேயர் தொகுதியை தனித் தொகுதியாக அறிவித்து நாடாருக்கும் தலித் மக்களுக்கும் துரோகம் செய்திரு க்கிறது 

அதிமுக அரசு என்றார் அவர். உங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு ஜெயலலிதா சொல்லட் டும் நான் ராஜினாமா செய்யத் தயார் என்றார் அவர்.
Tags: