தம்பதியர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்குள் புகுந்த சிறுத்தை !

உத்தரப் பிரதேசம் மாநிலம், மீரட் நகரை சேர்ந்த சுமித் ரத்தோர் மற்றும் அவரது இளம் மனைவியான ஷிவானி ஆகியோர் இயற்கை எழில் கொஞ்சும் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிட்டால் நகரை சுற்றிப்பார்க்க சென்றனர்.
தம்பதியர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்குள் புகுந்த சிறுத்தை !
இங்குள்ள டல்லிட்டால் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து அங்கு தங்கினர். பூட்டிய அறைக்குள் அந்த தம்பதியர் தனிமையில் இருந்தபோது ஓட்டலின் கண்ணாடி கதவை தாக்கி சிறுத்தை ஒன்று உள்ளே நுழைந்து, 

பக்கவாட்டில் இருந்த குளியலறைக்குள் புகுந்த சிறுத்தை அவர்களை ரத்தவெறியுடன் பார்த்து கொண்டிருப்பதை சுமித் கவனித்து விட்டார்.

சிறுத்தை சற்றே அசந்த நேரத்தில் குளியலறை கதவை தாழிட்ட சுமித் இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்துக்கு தகவல் அளித்தார். 

அவர்கள் அளித்த தகவலின் பேரில் துப்பாக்கி மற்றும் கூண்டுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மயக்க ஊசியால் சுட்டு சிறுத்தையை பிடிக்க முயன்றனர். 

ஆனால், அவர்களிடம் பிடிபடாத சிறுத்தை அருகாமையில் உள்ள காட்டுக்குள் பாய்ந்து மறைந்தது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரை சேர்ந்த சுமித் ரத்தோர் மற்றும் அவரது இளம் மனைவியான ஷிவானி ஆகியோர் இயற்கை எழில் கொஞ்சும் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிட்டால் நகரை சுற்றிப்பார்க்க சென்றனர்.

இங்குள்ள டல்லிட்டால் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து அங்கு தங்கினர். பூட்டிய அறைக்குள் அந்த தம்பதியர் தனிமையில் இருந்தபோது ஓட்டலின் கண்ணாடி கதவை தாக்கி 
சிறுத்தை ஒன்று உள்ளே நுழைந்து, பக்கவாட்டில் இருந்த குளியலறைக்குள் புகுந்த சிறுத்தை அவர்களை ரத்தவெறியுடன் பார்த்து கொண்டிருப்பதை சுமித் கவனித்து விட்டார்.

சிறுத்தை சற்றே அசந்த நேரத்தில் குளியலறை கதவை தாழிட்ட சுமித் இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகத்துக்கு தகவல் அளித்தார். 
அவர்கள் அளித்த தகவலின் பேரில் துப்பாக்கி மற்றும் கூண்டுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மயக்க ஊசியால் சுட்டு சிறுத்தையை பிடிக்க முயன்றனர்.

ஆனால், அவர்களிடம் பிடிபடாத சிறுத்தை அருகாமையில் உள்ள காட்டுக்குள் பாய்ந்து மறைந்தது.
Tags: