10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் !

இந்தியன் ரயில்வே, உலகிலேயே 4வது மிகப் பெரிய நிறுவனம் ஆகும். தினமும் 1.30 கோடி பயணிகள் இதனை உபயோகப் படுத்துகின்றனர். ரயில்வே பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ள இந்த தருணத்தில், இந்திய ரயில்வே பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்...
10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் !
* இந்தியா முழுவதும் 60 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு இருப்பு பாதை உள்ளது. தினமும் 11 ஆயிரம் ரயில்கள் அதில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

* சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் பணியாளர்கள் இதில் பணி புரிகின்றனர். போர்ப்ஸ் பட்டியலின்படி உலகின் 4வது மிகப் பெரிய நிறுவனம் இது.

* கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தான் இந்தியாவிலேயே நீண்ட தொலைவு பயணிக்கிறது. 

சுமார் 4 ஆயிரத்து 286 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரயில், 56 நிலையங்களில் நின்று செல்கிறது. மொத்த பயண நேரம் 82.30 மணி நேரம்.

* திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீன் வரை செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், 528 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறது. 

இதில் வதோதரா மற்றும் கோட்டா நகரங்களுக்கிடையே எந்த ஒரு ரயில் நிலையத்திலும் நிற்காமல் சுமார் ஆறரை மணி நேரம் இந்த ரயில் செல்லும். 

ஹவுரா - அம்ரிஸ்தர் நகரங்களுக்கிடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிக பட்சமாக 115 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

* புது டெல்லி - போபால் இடையே ஓடும் சதாப்தி எக்ஸ்பிரஸ் தான் இந்தியாவிலேயே அதி வேகமாக செல்லும் ரயில் ஆகும். இந்த ரயில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். 

உதகை மலைரயில் தான் இந்தியாவிலேயே குறைந்த வேகத்தில் செல்லும் ரயில். மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இது செல்லும்.

* அசாம் மாநிலம் குவஹாத்தியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மொத்தம் 65 மணி நேரம் பயணம் மேற்கொள்ளும். ஆனால் குறைந்தது 12 மணி நேரம் தாமதமாக வருவதை இந்த ரயில் வழக்கமாக கொண்டுள்ளது.

* அரக்கோணம் - ரேணிகுண்டா பாதையில் உள்ள வெங்கடர நரசிம்மராஜுவரி பேட்டை என்ற பெயர் கொண்ட ரயில் நிலையம் தான் இந்தியாவிலேயே உச்சரிக்க முடியாத அளவிற்கு 
10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் !
நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையம் . ஒரிசாவில் உள்ள' ஐபி,' குஜராத்தில் உள்ள 'ஒடி' ரயில் நிலையங்கள் அதற்கு நேர் எதிரானவை.

* இந்தியாவிலேயே இரு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே ரயில் நிலையம் நவ்பூர் ரயில் நிலையம் தான். இதன் ஒரு பகுதி மகராஷ்ட்ராவிலும் அடுத்த பகுதி குஜராத்திலும் அமைந்துள்ளது.

* மகாராஷ்ட்ராவின் அமகதுநகர் மாவட்டத்தில் ஒரே ரயில் பாதையில் எதிர் எதிராக இரு ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ஒன்று ஸ்ரீராம்பூர் மற்றொன்று பேலாபூர்.

* கடந்த 1981-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி, பிகாரின் பாகமதி ஆற்றில் ரயில் கவிழ்ந்த விபத்தில் 800 பேர் இறந்து போனார்கள். இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்து இதுதான்.
Tags:
Privacy and cookie settings