சூரியனும் கோள்களும் | The sun and planets !

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவ னென்றால் அவன் வானங்க ளைத் தூணின்றியே உயர்த்தி யுள்ளான்; 


நீங்கள் அவற்றைப் பார்க்கி றீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்;

இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத் திற்குள் வைத்திரு க்கின்றான்;

(இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத் திட்டப்படியே நடந்து வருகின்றன; 

அவனே (எல்லாக்) காரிய த்தையும் நிர்வகிக் கின்றான் – நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங் களை விளக்கு கின்றான். 

அல்குர்ஆன் 13:2 “நிச்சயமாக அல்லாஹ் தான் இரவைப் பகலில் புகுத்து கிறான்; பகலை இரவில் புகுத்து கிறான்;

இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படு த்தினான்” என்பதை நீர் பார்க்க வில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணை வரை செல்கின்றன; 

அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்ப வற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29 அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்;

பகலை இரவில் புகுத்து கிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக் கின்றான்; 

இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப் படியே நடந்து வருகின்றன; அவனே உங் களுடைய இறை வனாகிய அல்லாஹ்;

அரசாட்சி யெல்லாம் அவனுக் குரியதே, அவனை யன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கி ன்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. 

அல்குர்ஆன் 35:13 இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரை க்குள் அது சென்று கொண்டி ருக்கிறது;

இது யாவரையும் மிகைத் தோனும், யாவற்றையும் நன்கறிந் தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். 



இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்கு மிடங்களை) ஏற்படுத்தி யிருக்கி ன்றோம்.

 சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. 

இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40 அவன் வானங் களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்தி ருக்கிறான்;

அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; 

சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத் திற்குள்) வசப்படுத் தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது;

(நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். 

அல்குர்ஆன் 39:5 சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று  திருக்குர்ஆன் பல வசனங் களில் கூறுகிறது.

ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவ தாகவும் திருக்குர்அன் கூறுகிறது. பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். 

பிறகு உருண்டை யாக இருக்கிறது என்றான். உருண்டை யாக இருக்கிற பூமி தான்

இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான்.

பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான். 

இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது;

தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான். 

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும்,

தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள் களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது; 



அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டு மானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது. 

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோ கத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தை யல்ல; 

கடவளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற் குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.
Tags: