சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் சசிகலா !

0

சிறைவாசம் முடிந்து சசிகலா சென்னை திரும்பி இரு வாரங்களாகி விட்டன. சசிகலாவின் வருகை ஊடக கவனம் பெற்று விடக்கூடாது என அதிமுக தலைமை சில முயற்சிகளை மேற்கொண்டது. 

சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் சசிகலா
கொடியை பயன்படுத்தக் கூடாது, அதிக கூட்டம் கூடகூடாது, நிறைய கார்கள் அணிவகுக்க கூடாது என பல்வேறு நிபந்தனைகள் காவல்துறை மூலம் போடப்பட்டது. 

அவை அத்தனையையும் கடந்து ஆரவாரமான வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டது. சென்னை வந்தது முதல், யாரிடமும் பேசாமல், வெளியே தலையை காட்டாமல், அமைதி காத்து வருகிறார் சசிகலா.

4 கி.மீ நடை, 2 கி.மீ சைக்கிளிங்... 87 வயதில் துறையூர் தாத்தா !

மக்களைப் பார்த்த உற்சாகத்தில் நான் தீவிர அரசியலில் நிச்சயமாக ஈடுபடுவேன், பத்திரிகையாளர்களை விரைவில் சந்திப்பேன் என சூளுரைத்து விட்டு தி.நகர் இல்லத்துக்கு சென்றார் சசிகலா. 

இனி அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக தி.நகர் செல்வார்கள் என கூறப்பட்டது. 

ஆனால் இரு வாரங்களாகிய போதும் அதிமுகவிலிருந்து குறிப்பிடும் படியாக யாரும் சசிகலாவைப் பார்க்க வில்லை. சசிகலாவும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

ஆனால் இந்த அமைதியின் பின்னணியில் பெரும் அரசியல் திட்டங்கள் இருப்பதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அமைதி

சசிகலா அமைதி

சசிகலா அமைதியாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் இணைப்பதில் பாஜக முன்னெடுப்புகளை எடுக்கும் என்று வந்துள்ள சிக்னல்கள் தான்..

இதற்காகத் தான் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் நிருபர்கள் இந்த கேள்வியை கேட்டிருந்தனர். 

ஆனால் அவரும் நேரடியாக எந்த பதிலும் சொல்ல வில்லை. அதிமுக விவகாரம் என்பதால் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்று நழுவிக் கொண்டார்.

பாஜக

பாஜக

சசிகலாவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் யாருமே எந்த கருத்தும் சொல்லவில்லை. 

அதே நேரம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு படி மேலே போய்.. "எம்ஜிஆருக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சசிகலாவுக்கு தான் கிடைத்தது" என்று,

திண்டுக்கல் பிரியாணி செய்வது எப்படி? 

அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் வரும் போது தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 

இதெல்லாம் பாஜக தரப்பில் இருந்து சசிகலாவுக்கு கிடைக்கும் பாசிட்டிவ் சிக்னல்கள்.

பாஜக நிலைப்பாடு 

பாஜக நிலைப்பாடு

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை வந்த பிரதமர் மோடி ஓபிஎஸ், இபிஎஸ் கைகளை உயர்த்திப் பிடித்து மறைமுகமாக ஒரு சேதி சொன்னார். 

அதாவது இவர்கள் இருவரின் தலைமையிலான அதிமுகவுடன் தான் கூட்டணி என்பதை சொல்லாமல் சொன்னார். 

சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு என மனநிலையில் உள்ளாரா ஓபிஎஸ் என விமர்சனம் எழுந்து வரும் நிலையில் அவரை தவிர்த்து விட்டு, 

எடப்பாடி பழனிசாமியை மட்டும் தனியாக அழைத்து 10 நிமிடங்கள் பேசியதிலும் சசிகலாவுக்கு ஒரு மெசேஜ் உள்ளது.

யோசனை

சசிகலா யோசனை

தேர்தலுக்கு முன்பாக சசிகலாவை அதிமுகவுடன் இணைந்து போக வைத்து விட்டால் கூட்டணியில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைத்து விடும் என்று பாஜக தலைவர்கள் பலரும் நினைக்கிறார்கள். 
பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதில் மூங்கில் பாட்டில் !

சசிகலா சென்னை வந்த போது தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு தான் அவர்களை இப்படி மாத்தி யோசிக்க வைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

பாஜக எடுத்து வைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தான் வீட்டுக்குள்ளேயே காத்துக் கொண்டு இருக்கிறார் சசிகலா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்லீப்பர் செல்கள்

ஸ்லீப்பர் செல்கள்

கடந்த நான்கு ஆண்டுகளாக தினகரன் தங்களது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவுக்குள் இருப்பதாக கூறி வருகிறார். 

ஆனால் ஆரம்பத்தில் அவருடன் வெளியே வந்தவர்களைத் தவிர பின்னர் இப்போது வரை அதாவது சசிகலா வெளியே வந்த பின்னரும் கட்சி நிர்வாகிகளோ, 

எம்எல்ஏக்களோ, அமைச்சர்களோ சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வில்லை. இது சசிகலாவின் மௌனத்துக்கு முக்கியக் காரணமாக கூறுகிறார்கள்.

ஆதரவுகள்

ஆதரவுகள்

"சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் சசிகலாவுக்கு கடந்த காலங்களில் கூட ஆதரவு தெரிவித்தது வரலாறு. இப்போது அந்த ஆதரவு வட்டம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. 

சமீபத்தில் பேட்டியளித்த டிடிவி தினகரன் கூட பாஜக பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் முன் வைக்காமல் அமைதி காத்து வருகிறார். 

பள்ளி கூடத்துக்கு படிக்க வந்த பாம்பு - பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை !

இவை யெல்லாம் திரைமறைவு அரசியல்கள்" என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

சுற்றுப் பயணம்

சுற்றுப் பயணம்

ஒருவேளை சசிகலா மற்றும் அதிமுக ஆகியவற்றை இணைக்க முடியாமல் போனால், அதாவது, இணைப்புக்கு அதிமுகவில் உள்ள மேலிடத் தலைவர்கள் சம்மதிக்கா விட்டால், 

தமிழகம் முழுக்க "நீதிகேட்டு" சுற்றுப் பயணம் என்ற பெயரில், சசிகலா சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாக தெரிகிறது. 

டெல்டா மாவட்டங்களில் கணிசமாக உள்ள அதிமுக ஆதரவு வாக்குகளை அங்குள்ள சமுதாய தலைவர்கள் மூலமாக தன்பக்கம் இழுப்பதற்கு இந்த சுற்றுப் பயணம் சசிகலாவுக்கு உதவக்கூடும். 

மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் தனக்கு உள்ள ஆதரவு வட்ட வாக்குகளை அதிமுகவுக்கு செல்ல விடாமல் தடுப்பதற்கு சுற்றுப்பயணம் சசிகலாவுக்கு உதவும்.

உருக்கமாக பேச

உருக்கமாக பேச

அதே நேரம் மேற்கு மண்டலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக அதிகமாக சாதகமாக உள்ள பகுதி என்பதால், 

அங்கு சுற்றுப் பயண பிரச்சாரம் செய்யும் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டையும் சசிகலா சுமத்த மாட்டார் என்று தெரிகிறது. 

அதற்கு பதிலாக.. உங்கள் பகுதியை சேர்ந்தவரை நம்பி நான் ஆட்சியை ஒப்படைத்து விட்டுச் சென்றேன். 

அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று உருக்கமாக பேச உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா நடவடிக்கை

சசிகலா நடவடிக்கை

சசிகலாவின் அடுத்த நடவடிக்கைகள் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் இணைப்பை பொறுத்தே இருக்கிறது. 

அவ்வாறு நடக்காத பட்சத்தில் சூறாவளி சுற்றுப் பயணத்தை செய்ய சசிகலா தயாராகி விட்டார். 

பெங்களூரிலிருந்து சென்னைக்கு பல மணி நேரம் பயணம் செய்த போதே, தனக்கு உடல் நிலை தயாராக இருக்கிறது என்பதை உணர்த்தி விட்டார். 

எனவே தமிழக சுற்றுப் பயணம் அவருக்கு பெரிய கஷ்டமாக இருக்காது. அதற்காகத்தான் அமைதியாக ஓய்வெடுத்து வருகிறார் என்கிறார்கள் அமமுக வட்டாரத்தினர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)