பள்ளி கூடத்துக்கு படிக்க வந்த பாம்பு - பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை !

0
ஸ்கூலுக்கு போகணும்னு ஆசை வந்துடுச்சோ, என்னவோ... ஸ்கூல் பஸ்ஸிலேயே ஏறி வசதியாக சுருண்டு படுத்து கொண்டது ஒரு பாம்பு! ஆரணியை அடுத்த புதுப்பாளையம் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்கு சொந்தமாக பஸ் உள்ளது. 
பள்ளி கூடத்துக்கு படிக்க வந்த பாம்பு



இதனால் சுற்றுபுற கிராமங்களில் உள்ள மாணவர்கள் பெரும்பாலும் அந்த பஸ்ஸில்தான் பள்ளிக்கு சென்று வருவார்கள். இப்படித்தான் பஸ் வந்து நின்றது. ஆனால் அந்த பஸ்ஸு க்குள் 8 அடி நீளத்துக்கு ஒரு சாரைப் பாம்பு படுத்து கொண்டிருந்தது. 
இது தெரியாத பிள்ளைகள் முண்டி யடித்து கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள். அதுவரை அமைதியாக தூங்கி கொண்டிருந்த பாம்பு, பிள்ளைகள் போட்ட சத்தத்தால் டென்ஷன் ஆகி சர்ரென தனது தலையை வெளியே தூக்கி காட்டியது. 



பாம்பை பார்த்ததும் மாணவர்கள் அலறி அடித்து கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். இதை பார்த்த டிரைவருக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் அதுவரை அந்த பஸ்ஸில் இருந்தது பாம்பும் டிரைவரும் மட்டும் தான். 
வண்டிக்குள் எப்போ ஏறியது என்றே அவருக்கும் தெரியவில்லை. இதனால் தடாலடியாக ஒரு பிரேக்கை போட்டு வண்டியை நிறுத்தி அவர் ஒரு பக்கம் இறங்கி குதித்து ஓடினார். இந்த பரபரப்பு, பதட்டத்தை பார்த்ததும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து பாம்பை வெளியே எடுத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)