யோகா எப்போது செய்ய வேண்டும்? | Yoga !

யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந் தாலும் இந்த வொரு வார்த்தையை உபயோகிக் காமல் இருக்க முடியாது.
யோகா எப்போது செய்ய வேண்டும்? #Yoga !
இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக யோகம் இருக்கிறது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள்.

யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.
இந்து மதத்தில் பாம்பு பெரும் பான்மை யான இடங்களில் வணங்கப் படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப் பதைப் பல இடங்களில் சிலைப் படுத்தியிருக்கிறார்கள்.

உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்ப டுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது.

ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றது தான். 

மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்ப குதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதி யாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது.

யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போது தான் அதன் அளவிட முடியாத பேராற் றலும் மகத்து வமும் நமக்குப் புரியும்.

குண்டலி னியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல் வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மைய ங்களைப் பற்றிச் சொல்வது அவசிய மாகிறது.

சாதாரண மாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்க ப்பட்டு ஆற்றலாக மாற்றப் படுகிறது.
யோகா எப்போது செய்ய வேண்டும்? #Yoga !
அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவா யுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப் படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்கு விக்கிறது.

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணை கிறது.

இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்ப ட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள்.

(கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.)

இந்த ஏழு சக்கரங்கள் தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக் கின்றன.

மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

முதலில் மூலாதாரம்.
யோகா எப்போது செய்ய வேண்டும்? #Yoga !
இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமை ந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டு மானால் முதுகுத் தண்டின் பின் புறமாக அமைந்துள்ளது

ஆசன வாய்க்கு இரண்டு இஞ்சு மேலே என்று சொல்லலாம், இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும்.

இந்தச் சக்கரம் நன்கு தூண்டப் பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்க த்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான்.

இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனி தனின் வளர்ச்சிக்கு அடிப் படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப் படுகிறது.

இரண்டாவது சுவாதி ஷ்டானம்.

இது பிறப்புறு ப்புக்கு சற்று மேலாக அமைந் துள்ளது. இந்தச் சக்கர த்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும்.

இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க் கையில் இன்ப ங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவ த்துக்கு உதாரண மாகச் சொல்லப் படுகிறது.

மூன்றாவது மணிப்பூரகம்.

இது தொப்புளுக்கு அருகில் அமைந் துள்ளது. இந்தச் சக்கர த்தின் முக்கிய செயல் பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும்.
மணிப்பூரகம் நன்கு தூண்டப் பட்ட மனிதன் கடும் உழைப் பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்து வத்தை பிரதிப லிக்கிறது.

நான்காவது அனாகதம்.
யோகா எப்போது செய்ய வேண்டும்? #Yoga !
இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந் துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப் பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது.

அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன் படுத்தப் படுகிறது? சிந்திக்க நேர்கிறது.

இது தொண்டைக் குழியில் அமைந் துள்ளது. ஆகாயத் தத்து வத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத் துவது ஆகும்.

ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை).

இது மனிதனின் புருவ மத்தியில் அமை ந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப் படக் காரண மாக அமைவது இந்தச் சக்கரம் தான்.

இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்).

இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலை யைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம் தான்.

இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது. சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங் களும் முழுமை யாகத் தூண்டப் படுவது இல்லை.

பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகு றையாய் தூண்டப் பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். வெகுசிலர் தான் நான்கு வரை வருகி றார்கள்.
யோகா எப்போது செய்ய வேண்டும்? #Yoga !
ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான்.

அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல

குண்டலி னியை எழுப்பி, சக்கர ங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்ப டுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனு க்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும்.

பொது வாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச் சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக் கப்பட்டிருக் கின்றன.

இவ்வாறு கொண்டு வரும் போது புலன்கள் தாண்டிய ஓர் அனுப வத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது.

இந்தவொரு அனு பவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகா னந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு.

ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ் வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்கிறீர்களா?
யோகா எப்போது செய்ய வேண்டும்? #Yoga !
நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, நான் ஏன் பிறந்தேன் என்று உங்களைக் கேட்டுக் கொண்ட துண்டா? கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா?

கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா? அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழு மையாக இருக்கும்.

ஆனால் பெரும் பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரை குறை பதிலாக த்தான் இருக்கும்.

அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால் தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவ தில்லை.

பெரும் பான்மை மக்கள் பிறந்து விட்டேன். அதனால் வாழ்கிறேன் என்றுதான் வாழ்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வாழ்வை பரிபூர ணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை. (நீங்களும் தான்!!?)

பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்ப தால்தான் வாழ் கையை பற்றி ஒன்றும் புரிவ தில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவ தில்லை.

இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால் தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரண மாக்க முடியும்.

இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்த துண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரிய வில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை.

அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது.
யோகா எப்போது செய்ய வேண்டும்? #Yoga !
நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதை க்கான முயற்சி யாகவோ / அல்லது படி நிலைக ளாகவோ இருக் கலாம்.

உங்களு டைய இந்தக் கேள்விகளுக் கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களு க்குப் புரியவைக்க முடியாது.

அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக் கதை என்று உதறித் தள்ள த்தான் முடியும்.

இந்தக் கேள்வி களுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரண மாக்கும் அருமருந்தாய் மேற் சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும்.

சாதரண மனித னுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும்.

சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலை வானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகை யதொரு புலன்கள் தாண்டிய அனுபவம்.

உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும்.
யோகா எப்போது செய்ய வேண்டும்? #Yoga !
இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, யோகம். இந்த யோக நிலை யையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவா றாகச் சொல் கிறார்கள்.

சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியா கிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன்.

நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்து த்தான் அடைய முடியும்.

இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற் றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது.

இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் நாம் எந்தொ வொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.

உங்கள் உடலைப் பயன் படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன் படுத்தி அல்லது புத்தியைப் பயன் படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம்.

உங்கள் உணர்ச் சியைப் பயன் படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம்.உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன் படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.
யோகா எப்போது செய்ய வேண்டும்? #Yoga !
இந்த நான்கு யோக முறை களில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூகத் தோடு இணைத்து இருப்பதை விரும்பு வதில்லை.

ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடைய லாம்.

இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதரு க்கும் வித்தியா சப்படும். அதற்கு தான், குரு என்பவர் தேவை. 

ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால் தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.
Tags: