பாம்பின் தலையில் நாகமணி இருப்பது உண்மையா?

0
எல்லா காலத் திலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு கட்டுக் கதையை அவிழ்த்து விட்டு கொண்டே இருக்கிறார். 

அது கதையாக இருக் கிறது, அல்லது தொடர் கதையாய் மாறு கிறது. இணைய தளத்தில் சில நாள் களுக்கு முன்பு ஒரு காணொ ளியைக் காண நேர்ந்தது. 

அதில் ஒருவர் நாகப் பாம்பைப் பிடித்து அதன் கழுத்தை அறுத்து அதன் கழுத்தி லிருந்து சீதாப்பழ கொட்டை வடி விலான 

ஒன்றை வெளியே எடுக்கிறார், அதை நாகமணி எனச் சொல்கிறது அந்தக் காணொளி. உண்மையில் நாகமணி, நாக ரத்தினங்கள் எல்லாம் உலகத்தில் இருக்கிறதா?

தலையில் நாகமணி

30 வருடங் களுக்கும் மேலாக விஷப் பாம்பு களைப் பிடித்து விஷம் எடுக்கும் வடநெமிலிப் பகுதியைச் சேர்ந்த ராஜேந் திரனிடம் நாகமணி குறித்து 
உரை யாடிய போது "பாம்பு புடிக்கிற எங்க ஆட்கள் மொத்தம் 372 பேர் இருக்கோம். எல்லாரும் சேர்ந்து வருச த்துக்கு 8300 பாம்பு பிடிக்கிறோம், அதுல 2500 நாக பாம்புகள். 

ஒரு நல்லப் பாம்பு விடாம நாகமணிய நாங்க எடுத்து இருந்தா இன்றைய தேதியில் ஊருக்குள்ள பாம்புப் பிடிக்குற நாங்க தான் மிகப் பெரிய பணக்காரரா இருப்போம். 

நாகமணி, நாக ரத்தினம் எல்லாமே சுத்தப் பொய். நல்ல பாம்புல இருந்து விஷம் மட்டும் தான் எடுக்க முடியும், நல்ல பாம்புன்னு இல்ல, 

எல்லா பாம்பு களிலும் விஷம் மட்டும் தான் எடுக்க முடியும். விலங்கு களை வைத்து பிழைப்பு நடத்து வதில் இதுவும் ஒரு வழி’’ என்கிறார்.
மேட்டுப் பாளையம் பகுதியில் கடந்த ஆறு வருடங் களாகப் பாம்பு பிடிக்கும் வேலையே சேவை யாகச் செய்து வரும் 

ஜெஸ்வின் அவர்கள் சொல்லும் போது “பாம்புகள் சம்பந்தமா நெறயப் புத்தகம் படிச்சி ருக்கேன். பாம்புகள் தொட ர்பான எல்லா நிகழ்வு களுக் கும் போய் வந்து ருக்கேன். 

நாகமணி பற்றிய செய்திகள் மொத்த மாக பாம்புகள் பற்றிய தவறான பிம்பத்தை மக்கள் மத்தி யில் உருவாக்கிருக்கு. உண்மையா நாக மணிக்குப் பின்னாடி நடக்குற விஷயம் இது தான். 
காடுகளி லிருந்து பிடித்துக் கொண்டு வரப்படுகிற நாகப் பாம்பை அதன் தலையை அறுத்து, அதற்குள் மணி மாதிரி யான ஒரு பொருளை உள்ளே வைத்து விடு கிறார்கள். 

பின்னர் மக்கள் நட மாட்டம் இருக்கிற பகுதியில் கொண்டு வந்து தலையை அறுப்பது போல அறுத்து உள்ளே வைத்த மணியை எடுக்கி றார்கள். 

பின்பு அதை மக்க ளிடம் நாக மணி எனச் சொல்லி விற்பனை செய்கி ன்றனர். 

நாகமணி தங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என நினை க்கிற சிலர் எவ்வளவு பணம் கொடுத்தேனும் அதை வாங்கிச் செல் கிறார்கள். 

நம்ம மக்கள் அறிவியல் கூடவே பயங்கரமா விளை யாடுவாங்க. 
இதில் வேடிக்கை என்ன வென்றால் நாக மணியின் ஒளியில் வேட்டை யாடுகிற பாம்பு வேட்டை முடிந்ததும் மீண்டும் நாக மணியை விழுங்கி விடுவதாகச் சொல்கி றார்கள். 

அப்படி யெனில் நாகமணி வயிற்று க்குள் தானே போக வேண்டும் எப்படி பாம்பின் தலைப் பகுதிக்குச் செல்கிறது” எனவும் கேட்கிறார்.
பத்திலி ருந்து முப்பது ஆண்டுகள் வரை பயன் படுத்தாமல் இருக்கிற பாம்பின் விஷம் தான் 

ஒரு கட்ட த்தில் இறுகி நாக மணியாக மாறுவ தாகச் சொல் கிறார்கள். சிலர் நாக ரத்தினம் எனவும் சொல் கிறார்கள். 

இன்றைய கால கட்டத்தில் எந்த வகை பாம்பும் 20 முதல் 30 வருடங்கள் உயிர் வாழ்வது என்பது சாத்திய மில்லாதது. 

அப்படியே உயிர் வாழ்வது சாத்திய மென்றா லும் இன்னொரு இரை மீது விஷம் பாய்ச் சாமல் உயிர் வாழ்வ தற்கு சாத்தி யமே இல்லை. 

மேலும், இணைய தளங்களில் நாகரத்தி னத்தின் ஒளியில் பாம்பு வேட்டை யாடுகிறது எனச் சில காணொ ளிகள் காணக் கிடைக் கின்றன. 

அவை யெல்லாம் திட்ட மிட்டு பரப்பப் படுகிற பொய் என்கி றார்கள் ஆராய்ச்சி யாளர்கள் . 

நாக பாம்புகள் நாக மணியின் வெளிச் சத்தில் இரையைப் பிடிப்ப தற்காகத் தனது விஷத்தை 20 வருட ங்கள் சேமிக்கு மானால் 
அவை 20 ஆண்டுகள் உயிர் வாழ்வது எப்படி சாத்தியம் எனக் கேள்வி எழுப்பு கிறார்கள்.
உணவிற் காக, மருந்தி ற்காக என்று எல்லா நாடு களிலும் பாம்பு களை மையமாக வைத்து பல கறுப்புச் சந்தைகள் இயங்கிக் கொண்டி ருக்கின் றன. 
இந்தியா வில் மட்டும் தான் பாம்பில் நாகமணி இருக் கிறது, நாக ரத்தினம் இருக் கிறது என்று சொல்லி 

சிலர் மூட நம்பிக் கையைக் காசாக்கி கொண்டி ருக்கிறார் கள், சிலர் ஏமாந்து கொண்டி ருக்கிறார் கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings