சிறிய நாடு - மக்கள் தொகை 11 பேர் !

உலகின் மாபெரும் பேரரசு களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக் கிறோம். பல காலணி நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி,
சிறிய நாடு - மக்கள் தொகை 11 பேர் !
சூரியன் அஸ்த மிக்காத நாடு என்று அழைக்கப் பட்ட பிரிட்டன் சாம்ராஜியம், சீனாவில் இருந்து இந்துஸ்தான் வரை எல்லையை விரிவாக்கி யிருந்த செங்கிஸ்தானின் மங்கோலிய பேரரசு. காபூலின்
ஷூ போட்டால் உஷார்.... பாம்பு இருக்கலாம் !
கந்தஹாரில் இருந்து கர்நாடகம் வரை பரவி யிருந்த முகலா யர்களின் சாம்ராஜியம். ஆனால் உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? 

அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய ராஜிய த்தின் மக்களின் எண்ணி க்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். 

சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப் பணிந்து வாழ்ந்து வரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா. 

இத்தாலி யின் சர்டானியா பிராந்தி யத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந் துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா.
தன் உறுப்பை மாற்றிய புதிய திருநங்கை !
இத்தாலி யால் ஒரு நாடாக அங்கீ கரிக்கப் பட்ட இந்தத் தீவின் ஒட்டு மொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோ மீட்டர் தான்.

ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோ லாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவை க்குச் செல்ல வேண்டாம். 
எந்தவித முன்னனு மதியும் இன்றி அரசரை சுலப மாகவே பார்த்து விடலாம்.

ஆடம்பர மில்லாமல் இயல்பாக தோற்ற மளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதி க்கும் உரிமையாளர்.

சுற்றுலாப் பயணி களுக்கு படகுச் சவாரி ஓட்டு பவரும் அவரே. 180வது நிறுவக தினத்தை கொண் டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்ப தால்

அதை நாடு என்று சொல்வது வேடிக்கை யானதாக தோன்ற லாம்.  ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜி யத்தைப் பற்றி பெருமைப் படுகிறார். 

இத்தாலியில் வசித்து வந்த அந்தோனியா பர்த்திலியோனி யின் முப்பாட்ட னார் குஸெப் பர்த்லியோனி சகோதரி களான இருவரை திருமணம் செய்து கொண்டார். 

அப்போது இத்தாலி ஒரு தனி நாடல்ல. சர்டீனியா வில் ஒரு பாகமாக இருந்த இத்தாலி யில் இரண்டு திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம்.

எனவே அவர் 1807 ஆம் ஆண்டில் இத்தாலி யில் இருந்து இந்தத் தீவில் குடியே றினார்.

ஆடு வேட்டை

ஜெனோவா நகரில் வசித்து வந்த குஸெப் பர்த்லி யோனிக்கு, இந்தத் தீவில் இருக்கும் மின்னும் பற்கள் கொண்ட ஆடு களைப் பற்றி தெரிந்துக் கொண்டார்.

இந்த அரிய வகை ஆடுகள் உலகிலேயே இங்கு மட்டுமே வசிக்கக் கூடியவை. இந்த ஆடுகள் பற்றிய தகவல் இத்தாலி வரை சென்றது.

சர்டீனியா வின் ராஜா கார்லோ அல்பர்ட்டோ இந்த ஆடுகளை பார்க்க வும், வேட்டை யாடவும் தவோலாரா தீவுக்கு வருகை புரிந்தார்.

1836ஆம் ஆண்டில் தீவுக்கு வந்த போது தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட கார்லோ அல்பர்டோ, "நான் சார்டீனி யோவின் ராஜா" என்று சொன் னாராம்.
குர்பானி - சுகாதாரம் | Qurbani - health !
அவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட குசெப்பின் மகன் பாவோலோ, "நான் தவோ லாராவின் ராஜா" என்று கூறினார் என்று மூதாதையர்களின் தைரிய த்தை பெருமை யுடன் நினைவு கூர்கிறார் அந்தோனியோ.

மத்திய தரைக்கடல்

பாவோலோ, கார்லோ அல்பர்டோ வுக்கு தீவு முழு வதையும் சுற்றிக் காண்பித்து, இந்த சிறப்பு ஆடுகளை வேட்டையாட உதவியும் செய்தார்.

தீவை மூன்று நாட்கள் சுற்றிப் பார்த்த அரசர் கார்லோ அல்பர்டோ நாடு திரும்பி யதும், தவோ லாரவை தனி நாடாக அறிவித்து சாசனம் எழுதிக் கொடுத்தார். 
அதைத் தொடர்ந்து, தன்னை புதிய ராஜ்ஜி யத்தின் அரசராக பாவோலா அறிவி த்துக் கொண்டார்.

புதிதாக உதித்த ராஜ்ஜி யத்தின் மொத்தப் பிரஜைகள் 33 33 பேர் மட்டுமே. அரசரான பாவோலோ இறப் பதற்கு முன்ன தாக அரச கல்ல றையை அமைத் தார்.

அங்கு தான் புதைக்கப் பட்ட பிறகு, கல்லறை யின் மேற் புரத்தில் கிரீடம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் உத்தர விட்டார்.

அரசராக வாழ்ந்த போது, ஒரு முறை கூட மணி மகுடம் சூடாத பாவோலோ, கல்லறை க்குள் அடங்கிய பிறகு அதன் மேல் மகுடம் அமைக்கப் பட்டது என்பது சுவராசி யமான தகவல்.

அமைதி ஒப்பந்தம்

இத்தாலி யின் நிறுவனர் என்று அழைக் கப்படும் குசெப் கைரிபால்டி உட்பட பல நாட்டு அரசர் களுடன் தவோலாரா சமர சங்களை செய்து கொண்டது.

சர்டீனி யாவின் அரசராக இரண்டாம் விக்டோரியா இமானுவெல், தவோலா ராவுடன் ஒரு ஒப்பந் தத்தை மேற் கொண்டார்.

19ஆம் நூற்றா ண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனை வரின் புகைப் படங்களை யும் சேகரிக்கும் முயற்சி யில் ஈடுபட்டார்.

அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோ லாராவி ற்கும் சென்று அரசரின் புகைப் படத்தை பெற்றது.

அன்று முதல் இன்று வரை இங்கிலா ந்தின் பக்கிம் ஹாம் அரண் மனையை அலங் கரிக்கும் புகைப் படங்களில் தவோலாரா அரசரின் புகைப் படமும் ஒன்று.

பசிபிக் பெருங் கடலில் அமைந் துள்ள டோங்கா நாடு 748 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது

நேட்டோ ராணுவத் தளம்
இன்றும் அதே புகைப் படம் அந்தோனி யாவின் உணவு விடுதியை அலங்க ரிக்கிறது. 1962-ல், நேட்டோ வின் ராணுவத் தளமாக மாறிய பிறகு
நாய் உணவை சாப்பிட்ட செரீனா வில்லியம்ஸ் !
இந்த சிறிய ராஜ்ஜிய த்தின் இறை யாண்மை முடிவு க்கு வந்து விட்டது. பல இடங்க ளுக்கு செல்வ தற்கும் தடை விதிக்கப் பட்டுள் ளது.

ஆனால் இத்தாலி எப்போதுமே தவோ லாராவை தனது நாட்டின் ஒரு பகுதி என முறைப் படி குறிப் பிட்டதே யில்லை. உலகின் எந்தவொரு நாடும் தவோ லாராவை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ள வில்லை.

தவோ லாராவின் அரசர் அந்தோனி யோவும் அவரது குடும்பத் தினரும் இத்தாலி யில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவை களை வழங்கு கின்றனர்.

உலகில் இங்கு மட்டுமே காணக் கிடைக்கும் தனிச் சிறப்புத் தன்மை கொண்ட ஆடு களையும், அழிவின் விளிம்பில் இருக்கும்

ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள் கின்றனர்.
உலகில் இன்னும் அழுகாமல் இருக்கும் சடலங்கள் !
5 ஆயிரத்து 765 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புரூணை யின் மக்கள் தொகை 4 லட்சத்து 13 ஆயிரம்

பரம்பரைத் தொழில்

தீவு நாடான தவோ லாராவை சுற்றி இருக்கும் கடல் பகுதியில் பல்வேறு வகை யிலான கடல் வாழ் உயிரன ங்கள் சுற்றுலாப் பயணி களை கவர் கின்றன.

அந்தோனி யோவும் அவரது மருமகனும் படகு போக்கு வரத்தை நிர்வகிக்க, மற்றொரு உறவினர் மீன்பிடித் தொழி லிலும், இன்னும் ஒருவர் வேட்டைத் தொழி லிலும் ஈடு பட்டுள் ளனர்.
ராஜ்ஜிய பரிபாலனம் என்பது குடும்ப த்தை நிர்வ கிப்பது போல என்று அந்தோனியா சொல் கிறார்.

சுற்றுலா அதிகரித்து வருவ தால் கணிச மான வருவாய் ஈட்டுவ தாக கூறும் அந்நாட்டு அரசர், சாதாரண வாழ்க்கையே என்றும் சிறந்தது என்கிறார்.

ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலேண்ட், 17360 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது தினமும் காலையில் குடும்பத் தினரின் கல்லறை களுக்கு சென்று மலர் தூவி வழி படுவது அந்தோனி யாவுக்கு பிடித்த மானது.

ஆனால் அசல் பூக்களை எடுத்துச் சென் றால், ஆடுகள் மென்று விடுவ தால், பிளாஸ்டிக் மலர் களையே கல்லறை களில் வைத்து வழி படுகிறார்.

தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால் அந்தோனியா மற்றும் குடும்ப த்தினர் இத்தாலி யின் குடிமக்கள்.
வித்தியாசமான சொகுசு ஹோட்டல்கள் !
தனது ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் படி, டியூக் ஆஃப் சவாயிடம் கோரிக்கை வைக்க லாமா என ஒரு கால கட்ட த்தில் யோசித்த அந்தோனியா, பிறகு அதனை கை விட்டு விட்டார்.

தவலோரா வின் அரசர் கேட்கிறார் "சிறிய நாடாக இருந் தாலும், எங்கள் முன் விரிந்தி ருக்கும்

மிகப்பெரிய கடல் சாம்ராஜ் ஜியத்தின் கோட்டை யாக தவோ லாரா திகழ் கிறது. இதை விடப் பெரிய பேறு வேறென்ன இருக்க முடியும்?"
தென்னாப் பிரிக்கா வில் இருக்கும் லெசோதே 30 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.தவோலாரா போன்ற மக்கள் வசிக்கும் வேறு சில சிறிய ராஜ்ஜியங்கள்

1. ரெடோண்டா, இங்கி லாந்தின் செளத் ஹாம்ப்டனில் அமைந்தி ருக்கும் இது, புகை யிலைத் தடையில் இருந்து விலகி யிருப்பதற் காக தன்னைத் தானே தனி ராஜ்ஜி யமாக அறிவித்துக் கொண்டது.

2. பசிபிக் பெருங் கடலில் அமைந் துள்ள டோங்கா 748 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

ஒரு லட்சத்து ஆறாயிரம் மக்கள் வசிக்கும் இந்த நாடு, 1773இல் பிரிட்ட னின் கேப்டன் ஜேம்ஸ் குக்கால் கண்டு பிடிக்கப் பட்டது.

கேப்டன் குக் இந்த தீவை நட்புத் தீவு என்று அழைத்தார். ஆனால், இங்கு வசித்த வர்களோ கேப்டன் குக்கை கொல்ல நினைத் தார்கள்.

3. போர்னியோத் தீவில் அமைந் துள்ள புரூணை ஐந்தா யிரத்து 765 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

இங்கு மக்க ளிடம் எந்தவித வரியும் வசூலிக் கப்படுவ தில்லை. புரூணை சுல்தான், உலகின் மிகப் பெரிய செல்வந் தர்களில் ஒருவர்.
4. ஆப்பிரிக்கா வில் அமைந் துள்ள ஸ்வாசி லாந்து 17 ஆயிரத்து 360 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

இந்த நாட்டின் அளப்பரிய இயற்கை அழகி னால் இது மர்ம ங்கள் சூழ்ந்த நாடு என்று அழைக்கப் படுகிறது. ஸ்வாசி லாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 13 லட்சம்.

5. 30 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பள வில் அமைந் திருக்கும் லெசோதே, தென்னாப் பிரிக்கா வால் சூழப் பட்டது.

கடற் கரை மட்ட த்தை விட கீழே அமைந் திருக்கும். இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் இருபது லட்சம்.
Tags: