கடிக்க வந்த பாம்பை சமைத்த இந்தோனேசியர் !

0
கடந்த சனிக்கிழமையன்று சுமத்ராவின் பட்டங்கன்சால் மாவட்டத்தில் உள்ள பாமாயில் தோட்ட சாலையில், இந்த மிகப்பெரிய மலைப் பாம்பை பாதுகாவலர் ராபர்ட் நபாபன் பார்த்துள்ளார்.
கடிக்க வந்த பாம்பை சமைத்த இந்தோனேசியர் !
26 அடி நீளமுள்ள அந்த பாம்பைப் பிடிக்க நபாபன் முயற்சித்துள்ளார் என தகவல்கள் கூறு கின்றன. பாம்பு அவரைத் தாக்கியுள்ளது. சில கிராம மக்கள் உதவி யுடன் நபாபனும் அதைத் திருப்பித் தாக்கினார். 

கடைசியில் பாம்பு இறந்து விட்டது. நபாபேன் கடும் காயங் களுடன் உயிர் பிழைத் துள்ளார். நபாபன் போல இந்தப் பாம்பு அதிர்ஷ்டசாலியல்ல. 

கிராம மக்கள், பாம்பைத் துண்டு துண்டாக வெட்டி, வறுத்துச் சாப்பிடுவதற்கு முன்பு பாம்பின் உடல் கிராம த்தில் தொங்க விடப்பட்டது.

நான் அதை பிடிக்க முயற்சித்த போது எனது கையை கடித்தது. அதனிடம் சண்டை யிட்டு தப்பித்தேன் என இந்தோனீசிய செய்தி நிறுவனமான டெடிக்கிடம் நபாபன் கூறியுள்ளார்.

37 வயதான நபாபன், பாம்பை எதற்காகப் பிடிக்க முயற் சித்தார் என்ப தற்கான சரியான காரண த்தைக் கூற வில்லை. ஆனால், இந்த பாம்பினால், கிராம மக்களால் சாலையை கடக்க முடிய வில்லை என அவர் கூறுகிறார்.
அவர், பயத்தில் இருந்த மக்களைப் பாது காக்கவா அல்லது சாலையை சரி செய்யவா,  எதற்காக பாம்புடன் சண்டை யிட்டார் என்பது குறித்து மாறு பட்டத் தகவல்கள் வரு கின்றன.

பாது காவலரின் இடது கையை மலைப் பாம்பு தனது பற்களால் கடித்ததாக உள்ளூர் போலீஸார் ஏ.எஃப்.பி செய்தி நிறுவன த்திடம் கூறி யுள்ளனர். பிறகு அவர் பெக்கன்பரு நகர மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். 

அவர் இன்னும் குண மடைந்து வருவதாக பட்டங்கன்சல் மாவட்ட அரசின் தலைவர் எளினார் யோன் கூறுகிறார்.

நபாபன் கைகள் மோச மாகக் காய மடைந் திருப்பதாகவும், அவரது கையினை மருத்து வர்கள் வெட்ட வேண்டிய திருக்கும் எனவும் அவர் கூறி யுள்ளார்.

நல்ல சுவை
சுமத்ரா வின் தொலைதூர மாவட்ட மான இப்பகுதியில் மிகப் பெரிய மலைப் பாம்புகள் இருப்பது சாதாரண மான ஒன்று என அவர் கூறுகிறார். வறண்டக் காலத்தில் குடிநீரைத் தேடி அவை வெளியே வருகின்றன. 

அதே போல மழையில் குளிக்கவும் வெளியே வருகின்றன. ஒரு வருடத் திற்குக் குறைந்தது 10 பாம்பு களை யாவது இங்குக் காண முடிவும் என எளினா ர்யோன் கூறி யுள்ளார்.

பாமாயில் தோட் டத்தில் வழக்க மாக நிறைய எலிகள் இருக்கும். இந்த எலிகளைத் தான் பாம்புகள் வேட்டை யாடுகின்றன எனவும் அவர் தெரிவித் துள்ளார்.

இந்த மிகப் பெரிய மலைப் பாம்பு மக்களால் உண்ணப் பட்டது அவருக்கு ஆச்சரிய த்தைத் தரவில்லை, அது மிகவும் சுவையாக இருக்கும் என எனது நண்பர் களிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். 

7 மீட்டர் நீளமான இப்பாம்பில், நிறையக் கறி இருந்திருக்கும்
பாம்பும் ரத்தத் திற்கு குணப்படுத்தும் தன்மை இருப்பதாக சிலர் நம்பும் நிலையில், அவற்றை மருத்துவத்திற்குப் பயன் படுத்தலாம் எனவும் அவர் கூறுகிறார்.

கடந்த மார்ச் மாதம் ஒரு இந்தோனீசிய கிராமவாசி, மலைப் பாம்பின் வயிற்றில் பிணமாக கண்டெடுக்கப் பட்ட ஒரு வினோத சம்பவமும் நிகழ்ந் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings